ஒரே பாட்டில் உச்சத்தை தொட முடியும் என விக்ரமன்...
ஒரே பாட்டில் உச்சத்தை தொட முடியும் என விக்ரமன் பட ஸ்டைலில் உலகம் முழுவதும் பிரபலமான பாடல் கொலைவெறி.
இப்பாடலின் மூலம் தான் இன்று டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அனிருத் அறிமுகமானார்.
தனுஷ் வரிகள் எழுதிய இப்பாடலுக்கு வரவேற்பை பெற்றது போலவே தமிழ் மொழியை இழிவு படுத்துவது போல் உள்ளது என சில எதிர்ப்புகளும் கிளம்பின.
கொலைவெறி பாடலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதே இசையில் இலங்கை தமிழர் ஒருவர் பாடிய பாடல் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மீண்டும் இப்பாடல் வைரலாக பரவி வருகிறது.