24-0502015---அம்மாவை நினைத்து-----(4) நீருள்ள அளவும் உன்,கண் ***நீரினை நினைத்தோ...
24-0502015---அம்மாவை நினைத்து-----(4)
நீருள்ள அளவும் உன்,கண்
***நீரினை நினைத்தோ வாழ்வேன்?
போர்உள்ள வாழ்வில் யாரைப்
***புகலென இனிப்போய் நிற்பேன்?
யாருள்ளார் மடிதந்(து) ஆற்றி
***யமனையும் விரட்டு வாரே!
ஊரெலாம் எனைப்ப ழிக்க
***ஒன்றாகக் கூடி னாரோ?