எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திரைப்படங்களில் ஊழலை ஒழிக்கிறேன் , லஞ்சம் ஒழிக்கிறேன் ,...

திரைப்படங்களில் ஊழலை ஒழிக்கிறேன் , லஞ்சம் ஒழிக்கிறேன் , சமுதாயம் வளம் பெற வேண்டும் என அனல் கக்கி வசனம் பேசும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் 96 இல் ‘ ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது ‘என ஆருடம் தெரிவித்தார்.

ஆனால் நேற்றோ , ஊழல் வழக்கில் சிக்கி நீதிமன்ற தீர்ப்பில் விடுதலையாகி , இன்னும் முடியா பல சர்ச்சைகளுக்கு சொந்தம் கொண்டாடும் செல்வி ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் மிகுந்த மகிழ்வோடு பங்கேற்கிறார் என்றால் என்ன அர்த்தம்.. தமிழகம் காப்பாற்றப்பட வேண்டுமெனும் எண்ணமா ?

நடிகர்களே.. அரசியலில் அரைக்குறையாக பேசி பேசி மக்களை குழப்பாதீர். உங்களுக்கான செல்வாக்கை அரசியலில் திணிக்காதீர்.

கலைக்கூத்தாடி வேலைகளை மட்டும் கனகச்சிதமாக பாருங்கள் . இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை வஞ்சிக்காதீர் உங்கள் கோமாளித்தனமான பேச்சுகளுக்கு சுயநல செயலுக்கு.. வியாபாரம் செய்ய அதிகார மையத்தின் காலடியில் வீழ்வதற்கு என எப்படியோ இருங்கள். இந்த அரசியல் உங்களுக்கு ஆகாது. விட்டுவிடுங்களேன்.

பதிவு : வியன்
நாள் : 24-May-15, 4:36 pm

மேலே