வியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வியன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Apr-2015
பார்த்தவர்கள்:  234
புள்ளி:  123

என்னைப் பற்றி...

நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

என் படைப்புகள்
வியன் செய்திகள்
வியன் - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2015 1:06 pm

முதலில் வந்தவர்களை
மறக்கடிக்கிறது
நடிகையின்
தேர்ச்சி விவரங்கள்..!!

மேலும்

ச்சும்மா தாங்க.. உள் அர்த்தம்லாம் இல்ல.. சிரிப்போம்.. சில விசயங்கள் நடக்கும் போது கடுப்பை சிரிப்பாக தான் வெளிப்படுத்த வேண்டியிருக்கு 26-May-2015 9:59 pm
புரியவில்லையே. ஏதோ உள் அர்த்தமா? ஹி ஹி 26-May-2015 9:11 pm
இல்ல அதான் நீங்க... அது வேற கறுப்பு இது வேற கறுப்புனு சமாளிச்சிட்டீங்களே .. ஹிஹிஹி 26-May-2015 8:57 pm
இனறைய டாப் ரேட் நியூஸ் இதுதானே. ஆமா ,எனை பகடி செய்யவில்லையே ?? ஹி ஹி 26-May-2015 8:50 pm
எழுத்து அளித்த எண்ணத்தில் (public) priyaram மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-May-2015 4:31 pm

எழுத்து உறுப்பினர்களுக்கு வணக்கம்,

எழுத்து தளத்தில் இறுதி தேர்வு பட்டியலுக்கு படைப்புகளை தேர்ந்தெடுக்க நடுநிலையாளர்களின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே தளத்தில் புதிய நடுநிலையாளர்களை தேர்ந்தெடுக்க நீங்கள் பரிந்துரை செய்யலாம்.
நீங்கள் கருத்து பகுதியில் தாங்கள் பரிந்துரைக்கும் உறுப்பினர் பெயர்களை தெரிவிக்கலாம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.

மேலும்

அட பார்டா....இப்படி சொன்னா எப்படி ப்ரியா...(".......")? இறவாத புகழுடைய ஆக்கங்களை இளைஞர்கள் வெகுவாக செய்துக் கொண்டிருகிறார்கள்...ஆனால் அவற்றுக்கான அங்கீகாரம் இந்த யுகத்தில் சரியாக கிடைக்கவில்லை... பாரதி கூட இளைஞனாக இருக்கும் போது தானே சரித்திரம் படைக்கும் படைப்புகளை எழுதினான் ? சரி அதிகம் பேச வேண்டாம் என்றெண்ணுகிறேன் ! என்னுடன் நியாயங்களை விவாதிக்க இங்கே கை கோத்துக்கொண்ட முதல் ஆள் நீவீரே ! மறவேனே ! 29-May-2015 11:39 am
வணக்கம் கலை வாதம் வேண்டாம் விவாதமும் வேண்டாம் என்று நான் நினைக்கிறேன் .தளம் வளர வேண்டுமா தமிழ் வளர வேண்டுமா ....???எந்த கவிதை எழுதினாலும் கரு எதுவாக இருந்தாலும் அது தமிழ் மொழியில் தான் எனக்கு வேண்டும் இதுதான் என் ஆதங்கம் ....மற்றபடி யாரையும் அவமானபடுத்தும் நோக்கில் நான் எழுதவில்லை மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசினால் அவர்கள் ஒருமித்த கருத்துகாரகளுக்கு எதிரிகளா ????நான் யாருக்கும் எதிரி இல்லை கலை === பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் ====தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் =====தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் பாரதிதாசன் பாடல் இதுதான் எனக்கு வேண்டும் இதை இளையவர் சரி வர செய்வதில்லை .... முதல் இரண்டடி படி நடக்க நான் இன்னும் வளர வேண்டும் அடுத்த இரண்டாம் அடியின் படி நடக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன் கலை ... தவறு எனில் பொறுத்துக் கொள்ள அனைவரிடமும் தேவநேய பாவாணர் பாணியில் கேட்டுக் கொள்கிறேன் ... அனைவரும் என்னை பொறுத்துக் கொள்ளுங்கள் ... நன்றி கலை ...இதன் பிறகு நான் பேசமாட்டேன் ..வாதம் அதுவும் உன்னோட எனக்கு அறவே பிடிக்காது கலை . உன்னோட நியாயத்துக்கு கை கோத்து நின்றவள் ..... 29-May-2015 11:09 am
ப்ரியாராம்....உங்களது கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.... "பொடிசுகளை எல்லாம் விடுத்து" என்ற ஒற்றை வார்த்தையில் இளம் படைப்பாளிகள் அனைவரையும் (உங்களையும் சேர்த்து) அவமானப்படுத்தி இருக்கிறீர்கள் ! தளத்தில் சுமார் மூன்று வருடம் நான் சுழல்கிறேன்....இந்த மூன்று வருடத்தில் நன்கு மரபறிந்து இங்குள்ள இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டிய உருப்படியான ஐந்து "பெரிசுகளைக்" கூட என்னால் சுட்டிக் காட்ட முடியவில்லை இங்கே.....(முடிந்தால் நீங்கள் சுட்டிக் காட்டுங்கள் ) ஆனால் சரியோ தவறோ தமக்கு தாமே என்ற அடிப்படையில் இளைய படைப்பாளிகள் இளைய படைப்பாளிகளை நன்கு ஊக்கப்படுத்தி வருகிறார்கள் ! அப்படி ஊக்கப்படுத்தி வருகின்ற ஐம்பது இளம் படைப்பாளிகளை நான் இங்கே காட்டவா ? உங்களுக்கு யாரையாவது சிபாரிசு செய்ய விருப்பம் இருந்தால் செய்யுங்கள்..அது உங்களின் தனிப்பட்ட விருப்பம்....ஆனால் ஒட்டுமொத்தமாக இளம் படைப்பாளிகளை இப்படி சொல்லாதீர்கள் ! 28-May-2015 4:29 pm
அட போங்கப்பா ..... 27-May-2015 9:47 pm
வியன் - அருண்ராஜ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2015 3:50 pm

இந்த படத்தை இன்று தளத்தில் ஒருவர் பதிவு செய்திருக்கிறார் ... மனித நேயம் பற்றி இந்த படம் பேசுகிறது என்று புகழாரம் வேறு ... இந்திய நாட்டை இழிவு படுத்தி மனித நேயத்தை உலகுக்கு உரைக்கும் இது போன்ற படங்களை பதிவேற்றும் கண்மணிகள் தான் இந்திய நாட்டுக்கு தேவை ...

இடது புறம் ஒரு முஸ்லிம் .வலது புறம் ஒரு இந்து ... முஸ்லிம் என்பவர் இரக்க குணம் கொண்டவராம் .. பூனைக்கு கூட உணவு அளிப்பாராம் .. இந்து என்பவர் மனிதனுக்கு உணவு அளிக்காத மிருகமாம் ....

பூனைக்கு உணவு அளிப்பவர் ஏன் மாட்டை கொன்று தின்கிறார் (...)

மேலும்

இதோடு இதனை விடுவோம். அடுத்த நிகழ்விற்கு நாம் செல்வோம். நாம் எல்லோரும் ஒன்றே . தமிழர் . அனைவரும் மனித இனம். அது போதும் நம்மை செம்மை படுத்த . நல்வழியில் சென்றிட . அனைவரும் இன்புற்றிருக்க . பாசமும் நேசமும் நம் விழிகளாக நிலைக்கட்டும். நன்றி. 27-May-2015 4:18 pm
@பிரியன் அன்பே சிவம் .........!!!! 26-May-2015 5:58 pm
@வியன் நான் அவரை தவறாக நினைக்கவில்லை ..அந்த பதிவின் கீழே தோழர்கள் பதிவிட்ட கருத்துகளை படித்து பாருங்கள் .. இந்திய நாட்டை இழிவுபடுதியத்தை ஒருவர் சரி என்று சொல்கிறார் ..அதன் விளைவே நான் இந்த என்னத்தை பதிவிட்டதன் நோக்கம் ..பழனிகுமாரை காயபடுத்த அல்ல ... 26-May-2015 5:40 pm
அருண்வாலி, நாம் அன்பு செலுத்துவோமே... 26-May-2015 5:39 pm
வியன் - சத்தியதாஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2015 11:19 pm

இயற்கை
------------------
எங்கே தேடியும்
காணவில்லை
மின்மினி பூச்சிகள்
****
குடிசைக்கு கிடைக்கும்
காற்றை கூட தின்றுவிடுகின்றன
அடுக்குமாடிகட்டிடங்கள்
****
மதிய வேளையில்
என் நிழலே
என்னை கொன்றுவிடுகிறது
»சத்தியதாஸ்

மேலும்

நன்றி தோழரே 27-May-2015 6:07 pm
எழுது என்று ஒரு பிரிவை கிளிக் செய்தீர்கள் என்றல் , கவிதை, கதை, கட்டுரை, நகைச்சுவை என்ற நான்கு பிரிவு வரும்.... அதில் கவிதை கிளிக் செய்தால் நீங்கள் உங்கள் கவிதையை பதிவு செய்யும் விண்டோ ஓபன் ஆகும்.... அதில் நீங்கள் உங்கள் கவிதையை பதிவு செய்யலாம் ..... 27-May-2015 10:51 am
கவிதை பிரிவில் எப்படி பதிவிடுவது தோழர்களே 26-May-2015 9:50 pm
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் :) 26-May-2015 9:49 pm
வியன் - agan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 8:17 am

சத்தியதாஸ் சக்திவேல் தி துளிப்பாக்கள் நன்று .வாசித்து மகிழுங்கள் (இவரும் ஒரு படைப்பாளிதானே ...இவர் என்ன கவிப்பேரரசா என வினவினாலும் எவரும் வாசிக்கலாம் துளிப்பாக்களை )

மேலும்

வியன் - எண்ணம் (public)
25-May-2015 6:20 pm

இவ்வுலகில்
பிறக்கும் ஒவ்வொருத்தனுக்கும்
ஒவ்வொரு உணவுப் பருக்கையில்
உரிமையுண்டு .

பசித்தவனுக்கு உணவைப் போராடி
வாங்கிக்கொடுப்பது
கம்யூனிஸம்.
பசித்தவனுக்கு உணவை அடித்துப்பிடுங்கி
வாங்கிக்கொடுப்பது
மாவோயிசம் .

இரண்டுமே ஒன்றுதான்
உணர்வோம்.
உரிமையினை
மீட்டுக்கொடுக்கும் வழிவேறு.

-வியன்.

மேலும்

எனது விபரங்களை தெரிவிக்க விரும்பவில்லை. கலை மற்றும் எழுத்து உலகில் வயதுகளை விட படைப்புகளே திறன்களே அதிகம் விசாரிக்கப்படும்/ பார்க்கப்படும் தோழர். என்னை பொருத்தமட்டில் எழுதுகோலேந்தியவர்களிடம் பாலினம் அறிந்து திறமைச்சோதிப்பதே தவறு என்பேன். கேட்டதற்காக சொல்கிறேன். இளமைக் குறும்புகளை சுயத்திறனாய்வு செய்யக்கூடிய நாற்பதின் பாதையில் என் வயது பயணிக்கிறது. 27-May-2015 4:30 pm
தங்களின் வயதென்ன அறிந்து கொள்ளலாமா தோழர் வியன் அவர்களே ..மூத்தவரோ என்ற எண்ணம் எனக்குள்,,,,ஆகவே 27-May-2015 2:56 pm
நுண்மையான விளக்கம் ...........! ஒரு மேல்ல்ய கோட்டுக்கு இந்தப்பக்கம் கம்யூனிசம் கோட்டுக்கு அந்தப்பக்கம் மார்க்க்சியம் என்று வைத்துக் கொள்கிறேன் ... விளக்கத்துக்கு நன்றி 25-May-2015 8:37 pm
மார்க்சியம் என்பது விஞ்ஞான பூர்வமான கம்யூனிசம். பின் நவீனத்துவத்திற்கும் முந்தைய பலமிக்க சிந்தனைக்கொள்கையுடையது தோழா. கம்யூனிசம் மார்க்சியம் இரட்டை குழல் துப்பாக்கியே. விரிவாக சொல்வதென்றால் கம்யூனிசம் = தீர்வை தேடுவது மார்க்சியம் - தீர்வை முன் வைப்பது. நன்றி தோழரே. 25-May-2015 8:14 pm
வியன் - எண்ணம் (public)
25-May-2015 6:12 pm

மணம் தந்து மரணமாகும்
ஊதுபத்தி
ஒளித்தந்து உருகிவிடும்
மெழுகுவர்த்தி

இவ்வரிசையில்,
குற்றவாளி விடுவித்து
குற்ற உணர்ச்சியில்
தற்கொலையாகிறதாம்
நீதி .
ஆம் நீதியும்


-வியன்.

மேலும்

நெஞ்சம் வெடித்து நீதி சிதறி சாகும் நிலை என்று மாறுமோ ...மனுநீதி ஆட்சி மலராதோ மக்கள் மனம் குளிராதோ ??ஏக்கமே மிஞ்சுகிறது 27-May-2015 3:00 pm
வியன் - எண்ணம் (public)
24-May-2015 4:36 pm

திரைப்படங்களில் ஊழலை ஒழிக்கிறேன் , லஞ்சம் ஒழிக்கிறேன் , சமுதாயம் வளம் பெற வேண்டும் என அனல் கக்கி வசனம் பேசும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் 96 இல் ‘ ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது ‘என ஆருடம் தெரிவித்தார்.

ஆனால் நேற்றோ , ஊழல் வழக்கில் சிக்கி நீதிமன்ற தீர்ப்பில் விடுதலையாகி , இன்னும் முடியா பல சர்ச்சைகளுக்கு சொந்தம் கொண்டாடும் செல்வி ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் மிகுந்த மகிழ்வோடு பங்கேற்கிறார் என்றால் என்ன அர்த்தம்.. தமிழகம் காப்ப (...)

மேலும்

வியன் சார் ..... அரசியல்வாதிகளே தமது நிலைப்பாடுகளை கொள்கைகளை சந்தர்ப்பத்துக்கு ஏற்றார்போல மாற்றிக்கொள்ளும்போது நடிகர் எம்மாத்திரம் ? 24-May-2015 10:06 pm
நடிகர்கள் நடிக்கத்தான் லாயக்கு. கொடுக்கும் பணத்திற்கும் ஏற்றார் போல் நடிப்பார்கள், சிங்க் சக் அடிப்பார்கள். மக்களுக்கு என்ன உதவி செய்திருக்கிறார்கள்? இவர்கள் நடத்தும் Engg College, Scholl களில் ஏழைகளுக்கா இலவச கல்வி வசதியா அளிக்கிறார்கள், பணம் நன்கொடை பெற்று பணக்காரர்களின் பிள்ளைகளுக்குதான். இவர்களை தலைக்கு மேல் தூக்கி வைத்து, கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் அப்பாவி ரசிகர்கள் தான் பாவப்பட்டவர்கள். 24-May-2015 6:26 pm
அதே மூளைதானே.. அதே பகுத்தறிவுதானே அவருக்கு இருக்கிறது. 24-May-2015 5:10 pm
அது 1996 .....இது 2015 .......! 24-May-2015 4:59 pm
வியன் - எண்ணம் (public)
24-May-2015 4:10 pm

அன்புத் தோழர் ராம் வசந்த் மீண்டும் எழுத்து தளத்தில் வலம் வர வேண்டும். பல படைப்புகளை தர வேண்டும். தன்னலமற்ற அவரின் பங்களிப்பு தேவை.

எதுவாகினும், புறந்தள்ளி வாருங்கள் தோழர் ராம் வசந்த் அவர்களே.

மேலும்

ராம் வசந்த் தளத்தில் இருந்து போனதில் வருந்துகிற படைப்பாளிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியொன்றை அவரே வெளியிடுவார் விரைவில் என்று என் உள்மனதில் தோன்றுகிறது ..ராம்..இத்தனை மென்மையான மனதா உங்களுக்கு ..இங்கே அது தேவையில்லை என்று அவரிடம் பேச வாய்ப்புள்ளவர்கள் யாராவது சொல்லுங்களேன்..! 24-May-2015 8:45 pm
எதிர்ப்பார்ப்பதே நம் பலவீனம் தோழா. 24-May-2015 4:52 pm
நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் தங்களது இந்த எண்ணத்தில் நீங்களும் நானும் மட்டுமே உரையாடிக் கொண்டிருக்கப் போகிறோம் ..... 24-May-2015 4:49 pm
மிகவும் ஏற்கத்தக்கது தங்கள் கருத்து ..........! ஆனால் நல்ல படைப்பாளிகளுகாகக் குரல் கொடுப்பவர்களும் தங்களைப் போன்ற மிகக்குறைவான ஒரு சிலர்தான் ....! அதுதான் வருத்தமாக இருக்கிறது ...! 24-May-2015 4:48 pm
வியன் - அரங்க ஸ்ரீஜா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2015 8:09 am

என் படைப்புகளில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு ..

மேலும்

சித்திரம் பேசுகிறது ., அருமை ...வாழ்த்துக்கள் .., 24-May-2015 5:28 pm
மிக மிக அருமை! வாழ்த்துக்கள்! 24-May-2015 5:11 pm
இதெல்லாம் நீங்கள் கையினால் வரைந்தவைகளா .......மிகவும் அருமை 24-May-2015 4:05 pm
மிக்க நன்றி ! 24-May-2015 9:58 am
வியன் - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2015 5:50 pm

அசைந்தாடும் அழகியத் தென்றல் வந்து !
அழகியப் பெண்ணின் செவியில் நின்று !
அசரீரி போன்று ஒரு செய்தி சொன்னது !

வாழையும் மாவும் தென்றலுக்கு ஒன்றே !
ஏழையும் செல்வந்தனும் தென்றலுக்கு ஒன்றே !
வானமும் பூமியும் தென்றலுக்கு ஒன்றே !

பேதம் பார்த்துத் தென்றல் வீசுவதும் இல்லை !
மதம் பார்த்துத் தென்றல் விலகிப்போவதும் இல்லை !
மாதம் பார்த்துத் தென்றல் மறைவதும் இல்லை !

எங்கும் நிறைந்து நான் தண்மை தருகிறேன் !
பொங்கும் மனங்களில் ஆனந்தம் அளிக்கிறேன் !
ஏங்கும் இதயங்களை இதமாய்த் தொடுகிறேன் !

மெல்லிய மனங்களை வருடுகிறேன் !
செல்லத் தீண்டலால் இதம் தருகிறேன் !
மெல்ல வந்து மனம் கவர்கிறேன் !

மக்கள் ம

மேலும்

தம் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ! மிக்க மகிழ்ச்சி 26-May-2015 6:34 pm
தென்றல் வந்து காதில் சொன்னதை, உலகம் கேட்க முரசு கொட்டிய கவிதாயினிக்கு வாழ்த்துகள்! 26-May-2015 6:32 pm
நன்றி ஐயா 23-May-2015 7:12 pm
அருமை 23-May-2015 7:10 pm
வியன் - அரங்க ஸ்ரீஜா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2015 5:44 pm

என் அன்புத் தந்தைக்காக நான் உருவாக்கியப் படம் இது !

https://www.youtube.com/watch?v=YsfWp4QIjJA

மேலும்

மிக அருமை... வாழ்த்துக்கள்... 23-May-2015 9:56 pm
அருமையாய் உள்ளது ! நிச்சயமாய் "இவள் தந்தை என்னோற்றான்கொல் எனும் சொல்லை" கொடுக்கப் போகிறீர்கள் உங்கள் அப்பாவுக்கு..வாழ்த்துக்கள் ஸ்ரீஜா... 23-May-2015 8:23 pm
மிக்க நன்றி ஐயா 23-May-2015 7:54 pm
நன்றாக உள்ளது. பென்சில் ஆர்ட்டும் பார்த்தேன். மிக அருமை. வாழ்த்துக்கள்! 23-May-2015 7:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

மயில் அமுது

மயில் அமுது

கடத்தூர், உடுமலை வட்டம்
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)

இவர் பின்தொடர்பவர்கள் (18)

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே