சத்தியதாஸ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சத்தியதாஸ்
இடம்:  இராசிபுரம் , நாமக்கல்
பிறந்த தேதி :  19-Oct-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-May-2015
பார்த்தவர்கள்:  115
புள்ளி:  33

என்னைப் பற்றி...

சொல்லிகொள்ளும் அளவுக்கு எதுவும் சாதிக்கவில்லை

என் படைப்புகள்
சத்தியதாஸ் செய்திகள்
சத்தியதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2015 1:36 pm

இது ஓனான் பிடிச்ச
கூட்டமுங்க
கொஞ்சம் தும்ப
பூவிலும் தேன்
குடிக்கும் கூட்டமுங்க
பொன்வண்டு பிடிச்ச
கூட்டமுங்க
அதுல ரேசு வச்சு
ஜெவிச்ச கூட்டமுங்க
கச்சாள பந்து சுத்தி
முதுகு பழுக்க அடிவாங்குன
கூட்டமுங்க
ஐஞ்சு பைசா பத்து பைசா
மேல திருடாத கூட்டமுங்க...
சட்ட கிளிய சண்ட போடுவோம்
ஆனா சக்திமான ஒன்னா பார்க்கும் கூட்டமுங்க...
கில்லி தாண்டி கஞ்சி
காய்ச்சும் கூட்டமுங்க
பம்பரத்த ஒடைச்சு
ஆஸ்கரு வாங்குன கூட்டமுங்க
குண்டு பசங்கள பார்த்ததில்ல
எங்க தலை எண்ணெய் முகவரி கேட்டதில்ல
கூட்டாஞ்சோறு தின்னு பசிமறக்கும்
கூட்டமுங்க..
கட்டடிக்க மட்டும் தான்
காய்ச்சலு வரும் கூட்டமுங்க.
எங்க அம்மா சொன்

மேலும்

அற்புதமான கவிதை நட்பே!! காலத்தின் மாறுதலில் சுகமான தருணங்களும் சுமையாகி விட்டதே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Sep-2015 5:56 pm
சிறப்பான படைப்பு தோழரே... கிராமங்களுக்கு கூப்பிட்டுசென்று அங்கே கிடந்தவர்கள் தான் நகரத்திலும் என்று அருமையாக சொன்னீர்கள்.. 08-Sep-2015 3:21 pm
சத்தியதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2015 1:33 pm

நீ பிறந்ததினத்துக்கு மீண்டும் போகவேண்டும்
உன்னுடன் வாழாத
இந்த 24 வருடங்களை
வாழ்ந்துபார்த்திட வேண்டுமடி
..........
என் கைகடிகாரம் நீ பிறந்த
நேரத்திலே தினமும் நிற்குது
நான் இதே நேரத்திலே
இரு(ற)ந்துவிடுகிறேன்
என்று தினம் தினம்
அடம்பிடிக்குது
நான் தான்
தலையில் இரண்டு
தட்டு தட்டி அவனை ஓடசெய்கிறேன்.....
........
நாட்காடிகள் எல்லாம் உன்
பிறந்ததினத்தை கிழிக்ககூடாது
என்று உண்ணாவிரதம் இருக்குதடி..
.........
கண்களால்
சிரிக்கவும்
முறைக்கவும்
அறிந்தவள்
நீயடி

மேலும்

nalla kavithai இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Sep-2015 5:59 pm
அடப்பாவமே !! 08-Sep-2015 3:23 pm
சத்தியதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2015 1:26 pm

மீந்துபோன கச்சாளய
நேக்கா திருடி
மாமா கிட்ட கெஞ்சி
வாங்குன தார்குச்சியோட
கோலிகுண்டு சைசு
கல்ல வச்சு
பல்ல கடிச்சி
இருக்கி சுத்தி
ஆட்டுக்கு வைக்குற
கஞ்சி தண்ணீய
ஆயாவுக்கு தெரியாமா திருடி
அதுல பந்த ஊரவைச்சு
தயார் பன்ன பந்துல
ஊரகூட்டி விளையாண்ட
சூர பந்துல விழுவுர
அடி வாரம் முழுக்க
தொட்டு தொட்டு
தேயிச்சது ஒரு காலம்

மேலும்

சிறப்பு நண்பரே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Sep-2015 6:01 pm
அந்த காலம் அந்த காலம் தான் என்பதை ஒரு பந்தை வைத்து அதை செய்யும் முறையை வர்ணித்து அதற்குள் எத்தனை உருவுகள் நுழைகிறார்கள் என்பதையெல்லாம் தெளிய வைத்து கடைசியில் லேசாக ஒரு காலம் என்று முடித்தது காலத்திற்கும் நெஞ்சில் நிற்பது போல் உள்ளது..அருமை நண்பரே... 08-Sep-2015 3:18 pm
சத்தியதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2015 1:25 pm

மரங்களை கடவுள் ஆக்குங்கள்
வெட்டப்படாமல் இருக்கும்
கடவுள்கள்

மேலும்

அற்புதம் நிதர்சன வரிகள் 08-Sep-2015 6:03 pm
மீனா வினோலியா அளித்த படைப்பில் (public) Meena Vinoliya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2015 1:36 pm

உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதை விட....
உன் குடும்பத்தில் ஒருத்தியாக வாழ விரும்புகிறேன் .....,,,
என்று சொல்வதே நியாயம் .........
என் காதல் உனக்கு புரியுமா என்று தெரியவில்லை....,,,
என் காதலுக்காக என் காத்திருப்பு மட்டும்.........
என்றும் உனக்காக இருக்கும் ....,,,,
என் காத்திருப்பு உனக்கு புரிந்தால் போதும் ...........
என் காதல் வெற்றி பெரும் .........,,,,
என்ற நம்பிக்கையில் வாழ்ந்து விடுவேன் ...........,,,,,,,,,,

மேலும்

காத்திருப்பதின் சுகம் அதை சுகிப்பவர்களுக்கே தெரியும் ...... வாழ்த்துக்கள் . அருமை. 24-Jul-2015 9:13 pm
மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறேன் நட்பே 24-Jul-2015 10:22 am
அழகான வரிகள் 23-Jul-2015 3:12 pm
மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறேன் 10-Jul-2015 9:47 am
சத்தியதாஸ் - சத்தியதாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2015 8:38 am

விரல் இடுக்கில்
நீ கானும் பேய் படம்
ஒரு நாளாவது நான்
கான வேண்டும்.....
****
எத்தனை முறை சொல்வது என் முன்னே கூந்தல் ஒதுக்காதே
என்று இப்போ பார்
என் கண்கள் மந்திருச்சு விட்ட
கோழி போல் ஆகுதடி....
****
நான் தூங்கும் போது
தீடிரென விழித்தேன்
நீ என்னையே பார்த்து
கொண்டுயிருந்தாய்
இது போதாதா
நான் விழிப்பதற்கு...
****
கடிகார சத்தம்
கூட உன் தூக்கத்தை
கலைக்க கூடும்
என்று தான் முட்கள்
இல்லாத கடிகாரம்
தேடுகிறேன்.....
****
உன் வீட்டில்
உள்ள தென்னை
மரமாக மட்டும் என்னை
மாத்திவிடு
நீ குளித்த
தண்ணீர் குடித்தே
பிழைத்துகொள்வேன்...

மேலும்

நன்றி தோழி.. 23-Jul-2015 3:09 pm
ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் 23-Jul-2015 11:41 am
நல்லாயிருக்கு பேய் நீ புன்னகைப் பிசாசு நீ உள்ளத்தில் உலவி என்னை ஆட்டிப் படைக்கும் காதல் ஆவி நீ ! ----கவின் சாரலன் 23-Jul-2015 9:44 am
சத்தியதாஸ் - சத்தியதாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2015 8:16 am

என் வீட்டு ஜன்னல் வழியே
தினமும் பார்க்கும் குருவி
சோளத்தில் மேல ஒய்யாரமாக அமர்ந்திருக்கும்
இன்று சோளம் அறுவடையாகிறது
நாளை அங்கே விதைப்பது
விலை கற்களாக கூட இருக்கலாம்
அப்படியிருப்பின் நான் எங்கு தேடுவேன் அந்த குருவியை...

மேலும்

மிக்க நன்றி... 23-Jul-2015 10:38 am
மிக அருமை !! 23-Jul-2015 10:11 am
சத்தியதாஸ் - சத்தியதாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2015 8:08 am

நீ உண்ணும் போது
சிதறிய சோற்றுப்
பருக்கையைத்தான் தங்கள்
மகாராணியின்
புதையலாக பாதுகாக்கிறது
எறும்பு...

மேலும்

நன்றி தோழரே... 23-Jul-2015 10:36 am
நாம் அவசியமற்றது என நினைத்து ஒதுக்குவதெல்லாம் பிறர்க்கு மிகவும் அவசியமானதாக இருக்கலாம் !! நல்ல கவி !தொடருங்கள் ! வாழ்த்துக்கள் !! 23-Jul-2015 10:13 am
சத்தியதாஸ் - சத்தியதாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-May-2015 11:19 pm

இயற்கை
------------------
எங்கே தேடியும்
காணவில்லை
மின்மினி பூச்சிகள்
****
குடிசைக்கு கிடைக்கும்
காற்றை கூட தின்றுவிடுகின்றன
அடுக்குமாடிகட்டிடங்கள்
****
மதிய வேளையில்
என் நிழலே
என்னை கொன்றுவிடுகிறது
»சத்தியதாஸ்

மேலும்

நன்றி தோழரே 27-May-2015 6:07 pm
எழுது என்று ஒரு பிரிவை கிளிக் செய்தீர்கள் என்றல் , கவிதை, கதை, கட்டுரை, நகைச்சுவை என்ற நான்கு பிரிவு வரும்.... அதில் கவிதை கிளிக் செய்தால் நீங்கள் உங்கள் கவிதையை பதிவு செய்யும் விண்டோ ஓபன் ஆகும்.... அதில் நீங்கள் உங்கள் கவிதையை பதிவு செய்யலாம் ..... 27-May-2015 10:51 am
கவிதை பிரிவில் எப்படி பதிவிடுவது தோழர்களே 26-May-2015 9:50 pm
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் :) 26-May-2015 9:49 pm
சத்தியதாஸ் - சத்தியதாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-May-2015 11:17 pm

கோபம் மட்டும்....

சாதி தெரிந்த பிறகே
சொல்லிதரப்படுகிறது
"சாதிகள் இல்லையடி பாப்பா"
****
கறிகோழிகள்
உருவாகும் பண்ணை
பள்ளிக்கூடம்
****
மண்ணின் இரையை
தின்றது மின்சாரம்
"மின்சார சுடுகாடு"

»சத்தியதாஸ்

மேலும்

தங்களது கருத்துகள் ஊக்கமளிக்கிறது நன்றி உறவுகளே :) 26-May-2015 9:56 pm
மிக்க நன்றி 26-May-2015 9:31 pm
நன்றி 26-May-2015 9:30 pm
நன்றிங்கோ 26-May-2015 9:29 pm
சத்தியதாஸ் - சத்தியதாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2015 9:11 pm



குட்டி தேவைதைள்

உன்னை தூங்கவைக்கும்
முயற்சிக்கும் என்னையும்
தூங்கவைத்துவிடுகிராய்
******
எனக்கு மட்டும்
நீ செய்த
மன்சோற்ரை ஊட்டிவிடுகிராய்
***
உன்னோடா பிஸ்கடை
தின்ரே உன்னை விட
வளர்ந்து நிக்கும் நாய்க்குட்டி
***
நீ வரைந்த ஓவியங்கள்
ஆஸ்கரிலும் போட்டி
போடும்
***
உலக போர் கூட
தோற்றுவிடும்
உன்னை சாப்பிட
வைக்கும் போரில்
***
நிலவையும் மருதானியாக
கையில் வைத்துகொள்கிறாய்
***
உன் செல்ல முத்தம்
போதுமடி
நான் வாழ

மேலும்

மாற்றி கொள்கிறேன் தோழா 17-May-2015 10:06 pm
தோழரே. ரகர றகர னகர ணகர எழுத்துகளின் வேறுபாடுகளை சொற்களில் பயன்படும் அர்த்தங்களை அறிக தோழா. கவிதை எழுதியும் பயன் இல்லாமல் இருக்கலாமா ? கவிதையில் நிறையப்பிழை இருக்கிறது 17-May-2015 10:02 pm
நன்றி தோழி 17-May-2015 9:57 pm
நல்ல முயச்சி தோழரே !...........தொடருங்கள் வாழ்த்துகள் 17-May-2015 9:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை
மேலே