போட்டிகள் எனும் பகுதியில் புதியதாக அறிவிக்கப்பட்ட போட்டியை கவனிக்கவும்....
போட்டிகள் எனும் பகுதியில் புதியதாக அறிவிக்கப்பட்ட போட்டியை கவனிக்கவும். சிரித்து விடக்கூடாது,. சிந்தியுங்கள்.
பத்து ரூபாய் முதல் பரிசு ... ஐந்து ரூபாய் இரண்டாம் பரிசு.
பரிசா முக்கியம். ? என கேட்பீர்கள். சரிதான். பரிசு முக்கியம் அல்ல. ஆனால் போட்டி என்றால் பரிசு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பரிசு என்றால் அது ஊக்க காரணியாக இருக்க வேண்டும்.மதிப்பு மிக்கதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் எதுக்கு போட்டி என்கிற ஒரு சொல்லாடல்? வெறுமனே இப்படி ஒரு கவிதை வேண்டும் என்று கேட்டால் நீங்கள் எல்லாம் எழுதி கொடுக்க மாட்டீர்களா என்ன ?
பரிசு என்பது ஒரு நூலாகவோ.. அல்லது குறைந்தபட்ச மதிப்புமிக்க பொருளாகவோ.. அல்லது குறைந்தபட்ச மதிப்புமிக்க பணத் தொகையாகவோ இருத்தல் வேண்டும். மாறாக.. இப்படி கோயில் வாசலில் பிச்சைக்காரனுக்கு கொடுப்பது போல இருக்க கூடாது அல்லவா.. ?
எழுத்து நிர்வாகம் போட்டி பகுதியில் அறிவிக்க கூடிய போட்டிக்கான விதிமுறையை கடுமையாக்க வேண்டும். மேலும் நடந்துமுடிந்த போட்டிகளில் பரிசுகளும் சரியான முறையில் வெற்றியாளர்களுக்கு சென்றடைந்ததா... என்பதையும் உறுதிச்செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
கொஞ்சம் ஆதங்கத்துடன்
-இரா.சந்தோஷ் குமார்