--- பட்டரின் தவம்--- சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய...
---பட்டரின் தவம்---
சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையில் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங் கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்து
தன்னந் தனி இருப்பார்க்கு இதுபோலும் தவம் இல்லையே !
-----அபிராமி அந்தாதி