எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படைப்பாக்கங்கள் அது இலக்கியமாகவோ.. திரைப்படமாகவோ... இசையாகவோ இருந்தாலும்.. அவைகள்...

படைப்பாக்கங்கள்  அது இலக்கியமாகவோ.. திரைப்படமாகவோ... இசையாகவோ இருந்தாலும்.. அவைகள் மக்களிடையே பெரும் தாக்கத்தையை ஏற்படுத்தி .. புரட்சியையோ மாற்றத்தையோ ஏற்படுத்தி விடக்கூடும் என விரும்பது ஒரு விதம்.. அஞ்சுவது ஒரு விதம். அப்படி அஞ்சும் ஒரு சிலரால்  சங்கடத்திற்கும் பாதிப்பிற்கும் உள்ளான சமீபத்திய ஓர் உதாரணம் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான். 


ஒரு சில குருட்டுத்தனமான இன.....நிற. மதவாதிகளுக்கு .......! 

படைப்பாளியை படைக்க விடுங்கள். படைப்பை பற்றிய முழு புரிதல் இல்லாமலே...படைப்பின் உள்ளார்ந்த நோக்கத்தை அறியாமலே... படைப்பாளியின் மீது அழுத்தத்தை சுமத்தி  எந்த நெறிகளை .. அறங்களை நீங்கள் காப்பாற்றி விடப்போகிறீர்கள் பழமைவாத விரும்பிகளே..!  ?

படைப்பு என்பது ஒருவரின் தொழில் மட்டுமல்ல. ஆன்மா.. தார்மீக உரிமை..!  சுதந்திரம்.  ஆறுதல்..  உணர்ச்சி...  இதில் அரைக்குறையாய் புரிந்துக்கொண்டு அவரவர் கருத்துகளை உள்ளீடு செய்ய விரும்பி கட்டாயப்படுத்தி... தலையீடுச் செய்ய எவருக்கும் எந்த உரிமையுமில்லை.

படைப்பாக்கங்களை படைப்பாளியின் போக்கில் படைக்க விடுங்கள். படைப்பை விமர்சனம் செய்யவே உங்களுக்கு உரிமை இருக்கிறது அன்றி, எப்படி படைக்க வேண்டும்.. எதற்கு.. யாருக்கு படைக்க வேண்டும் என்று வலுக்கட்டாயப்படுத்த எவருக்கும் எந்த அருகதையும் இல்லை. 


-இரா.சந்தோஷ் குமார். 

நாள் : 16-Sep-15, 2:17 pm

மேலே