தோழமை நெஞ்சங்களுக்கு என் சமூக சேவகி திருமதி காந்திமதி...
தோழமை நெஞ்சங்களுக்கு என்

சமூக சேவகி திருமதி காந்திமதி அவர்கள் "சுவாமி விவேகானந்தர்" அவர்களைப் பற்றிய கவிதை தொகுப்பினை வெளியிட இருக்கிறார். விவே கானந்தரைப் பற்றிய உங்கள் கவிதை தொகுப்பினில் இடம்பெற வேண்டுமாயின்
உங்கள் கவிதையை அனுப்ப வேண்டிய
" davidsongs58@gmail.com "
பெறப்படும் கவிதைகள் தெரிவு செய்யப்பட்டு 100 கவிதைகள் தொகுப்பினில் வெளிவரும். முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் சிறந்த கவிதைகளுக்கு பரிசளித்து நூல் வெளியிடப்படும் தினத்தினில் அவர்களுக்கு சிறப்பும் செய்யப்படும். பரிசுத் தொகை இன்னும் முடிவு செய்யப் படவில்லை. தகவல் கிடைத்த உடன் அறிவிக்கிறேன்.
விதிமுறைகள்:
கவிதை விவேகானந்தரைப் பற்றி மட்டும் இருத்தல் வேண்டும்.
கவிதை 24 நான்கு வரிகளுக்குள் இருத்தல் அவசியம்.
கவிதை மரபாகவோ, வெண்பாவாகவோ அல்லது புதுக் கவிதையாகவோ இருக்கலாம்.
எழுத்துப் பிழைகளையும் ஆங்கில வார்த்தைகளையும் தவிர்க்கவும்.
கவிதையை அனுப்பி வைக்க வேண்டிய இறுதி நாள் 30-11-2015.
அனுப்பப்படும் படைப்புகளுக்கு தானே முழு உரிமையாளர் என்ற உறுதி சான்றுடன் தமது பெயர், மற்றும் முகவரி
போன்ற விடயங்களை படைப்புடன் இணைத்து மேற்குறிப்பிட்ட மின் அஞ்சலுக்கு அனுப்பப்பட வேண்டும்.
தளத்தில் உறுப்பினர் அல்லாதோரும் கலந்து கொள்ளலாம்.
உங்களது கவிதை தொகுப்பில் இடம் பெறும் பட்சத்தில், தகவல்கள் உங்களுக்கு மின் அஞ்சல் மூலம் கிடைக்கப் பெறும்.
வாழ்த்துக்களுடன்
சொ. சாந்தி