எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு! இத்தளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் தளமாகவே கருதப்படுகிறது. ஆதலால்...

சம்பந்தப்பட்டவர்களுக்கு!


இத்தளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் தளமாகவே கருதப்படுகிறது. ஆதலால் படைப்பு என்ற தலைப்பின் கீழ் கவிதை, கதை, கட்டுரை, நகைச்சுவை என பிரிவுகள் உள்ளன,.  இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்காகவே எவ்வித கட்டுப்பாடும் இன்றி எல்லா படைப்புகளும் ஏற்கப்படுகின்றன.  இத்தளத்தில் எழுத ஆரம்பித்து வளர்ந்த பலர் உள்ளனர் (என்னையும் சேர்த்து)

சமீப காலமாக சிலர் அதிகமாக  வலைதளங்களில் கண்டவற்றை கவிதை/கதை/கட்டுரை என பகிரத் துவங்கியுள்ளனர்...  அதுவும் மிக அதிகமான எண்ணிக்கையில் தினமும்.  நல்ல தகவல்கள் வரவேற்கப்பட வேண்டியது என்றாலும் அவைகளின் அபரிமிதமான எண்ணிக்கை படைப்புகளை மூழ்கடிக்கின்றன...

இதுபோன்ற பகிர்வுகளை 'படைப்புகளின்' கீழ் பதியாமல் தனியாக எண்ணங்களில் பதிந்தால் சொந்தமாக முயற்சி செய்து பதியும் படைப்புகள் மற்றவர் பார்வை படும்...

தளம் இதுபோன்று பகிர்வுக்கு தனிப் பகுதி ஒதுக்கவும் முயலலாம்.  

சுயமான புனைவுக்கு முதலிடம் இல்லையெனில் படைப்பாளிகள் பலர் தளம் மாறலாம்.
------  முரளி

பதிவு : முரளி
நாள் : 21-Nov-15, 11:58 am

மேலே