ஏமாளி நலுங்குகளில் தேடும் நளினங்களை விலங்கு பூட்டி வேடிக்கை...
ஏமாளி
நலுங்குகளில் தேடும்
நளினங்களை விலங்கு பூட்டி
வேடிக்கை பார்த்தார்கள்.
தானச் சவரன்கள்
தாழ்வாரங்களில் தொங்கி
தைரியம் தந்ததால்
தீயின் நாக்குப் பசிக்கு
தீவனம் அதிகமில்லை.
இன்னும் போக
எத்தனையோ தூரமிருக்க
இவர்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு
ஆளாளுக்கு கொடி தூக்கினார்கள் .
வழக்கம்போல கிராமத்தான்
வயல் வெடிப்பை மறந்து
வேட்டிக்காரன்
வாய்ப் பேச்சில் மயங்கி
வாயில் துண்டுப் பீடியோடு......
சுசீந்திரன்.