எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்ததில் பிடித்தது : தளிர் ஹைக்கூ கவிதைகள்! !...

படித்ததில் பிடித்தது :  தளிர் ஹைக்கூ கவிதைகள்!  !

இரவு நேரம்இசை இனிக்கவில்லை!கொசு!
பற்றிக் கொண்டதும்பற்று அறுத்ததுநெருப்பு!
விளக்கேற்றி வைத்த போதும்சூழ்ந்து கொண்டது இருள்!நிழல்!
ஓசையோடு வாகனங்கள்!அமைதி தொலைத்த சாலைகள்!நள்ளிரவு
தழுவ மறுத்ததும்கலைந்து போனது நித்திரை!காற்று!
வண்ணமில்லா சித்திரங்கள்!கருவில்லாமல் உருவாகின!நீர்ச் சிதறல்!
புரட்டிப் பார்த்தது புத்தகங்களைபடிக்கவில்லை!காற்று!
துரத்தி வந்தனபிடிக்க முடியவில்லை!வாகன முகப்பில் பூச்சிகள்!

முகவரி இழக்கும் முன்முகம் ரசித்ததுதேன் சிட்டு!
கூந்தலில் பூச்சூடினமரங்கள்!மின்மினி!
குறும்புகள் பூக்கையில்குதுகலமாகிறது வீடு!குழந்தை!

சுண்ணாம்பு கட்டியில்லைகரும்பலகையில் வளைகோடு!பிறை நிலவு!
சுட்டெரிக்கும் சூரியன்!தள்ளிப்போனதுகாற்று!
பெரியவர்களான குழந்தைகள்!புரியாமல் பூரிக்கும் பெற்றோர்குட்டி சுட்டீஸ்!
பிஞ்சுகள் நஞ்சாகபெற்றோர்கள் கொடுக்கிறார்கள் விலை!தொலைக்காட்சி!
தாங்கி பிடித்தும்தவிக்கவிட்டு சென்றனர்துணி கிளிப்!
ஓலமிட்டன வண்டுகள்!சூழ்ந்து கொண்டதுஇருள்!

நாள் : 23-Mar-16, 11:36 pm

மேலே