எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதுமதுரை சித்திரைத் திருவிழாவின் முதல்...

சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதுமதுரை சித்திரைத் திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தங்கக் கொடிமரத்தில் சிவலிங்கம், காளை உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளைக் கொடியை சிவாச்சாரியார்கள் காலை 10.35 மணிக்கு ஏற்றினர். அப்போது, வேதமந்திரங்கள் ஓதப்பட்டு, மேளதாளம் முழங்கியது. அதன் பிறகு, கொடிமர பூஜை தொடங்கியது. மரத்தின் நான்குபுறமும் தர்ப்பைப் புல் கட்டப்பட்டன. மரத்தின் முன்பகுதியில் சுவாமியைக் குறிக்க வெள்ளை வேஷ்டியும், அம்மனைக் குறிக்க ரோஸ் நிற சேலையும் கட்டப்பட்டன. அதன் பிறகு கும்பத்திலிருந்த புனித நீர் கொடிமரத்தில் ஊற்றப்பட்டன. காலை 11.30 மணிக்கு கொடிமரத்தில் மாலைகள் தொங்கவிடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, ஓதுவார்கள் தேவாரம், திருவாசகத்தைப் பாடி கொடியேற்ற பூஜையை நிறைவு செய்தனர்.  

நாள் : 12-Apr-16, 4:48 am

மேலே