நாளைய பொழுது புலரட்டும் நல்லாட்சி மலரட்டும் சமத்துவம் பேணி...
நாளைய பொழுது புலரட்டும்
நல்லாட்சி மலரட்டும்
சமத்துவம் பேணி
சமூக நீதயை நிலைநாட்டும்
ஆட்சியாக மாறட்டும்.
குற்றங்கள் குறையட்டும்
அனைவருக்கும் பாதுகாப்பு
எப்போதும் கிடைக்கட்டும்.
லஞ்சம் ஒழியட்டும்
சுரண்டல் மடியட்டும்.
ஏழ்மை மறையட்டும்
வேளாண்மை சிறக்கட்டும்.
தொழில் வளம் சிறக்கட்டும்.
வேலை வாய்ப்பு பெருகட்டும்.