நம்மை விட்டுப்பிறிந்த மாமனிதரின் நினைவில்..... என் வீட்டுப்பெரியவரே! என்...
நம்மை விட்டுப்பிறிந்த மாமனிதரின் நினைவில்.....
என் வீட்டுப்பெரியவரே!
என் நாட்டு மூத்தவரே!
நீர் இன்று இல்லையென்று
நிலைகுலைந்து போனோமே!
நித்திரைக்குப்போநீரோ!
நீண்டதொருயாதிரைக்குப்போநீரோ
நிகழ்கால கடலுக்குள்
நீந்திவரமாட்டீரோ!
ஆயிரம் கைகளிங்கே
அணைத்துக்கொள்ள இருக்கையிலே
அள்ளிப்போன கைஎதுவோ-
உம்மை யாசித்துப்பெற்றதுவோ?!
உலகமைதி கொள்ளவேண்டி-
உரை நிகழ்த்தப்போநீரே!
உமக்கமைதி வேண்டுமென்று
உடல்விடுத்துப்போநீரோ!?
உமக்காக ஓர்நாளும் வாழாத உத்தமரே!
உயிர்பிரியும் நேரத்திலும் மனிதநேயம் காத்தவரே!
நீரில்லா மேகம் உலாவிஎன்ன இலாபம்,
நீர்! இல்லா உலகம் இனி என்ன ஆகும்??
நரைமுடி அழகோடு திரும்பிவரமாட்டீரோ!
நெஞ்சம் கனக்கிறதே.,
சுமை இறக்கிவைப்பீரோ?!
வயதிலே மூத்தவரே!
வார்த்தையில் இளையவரே!
நீண்டிருக்கும் வானத்தை நீர் அளந்து பார்த்தீரே!
நிலையாமை வாழ்வென்று
நீர் இன்று சொன்னீரே!
அக்கினி சிறகு தந்தீர் -
அதில் அனல் பறக்க உணர்வு தந்தீர்!
முன்னேறு முடியுமென்றீர்!
முயலாமை மூடரென்றீர்!
மதம் கடந்த மனிதரே!-
எங்கள் மனங்கடந்த புனிதரே!
தரனிகண்டதமிழரே!-
என்றும் தடம்பிரளா தீரரே!
இனி இஸ்லாமிய உதட்டிலே
இந்துக்கீதை பிறக்குமோ!?...இல்லை
இயேசுநாதர் உருவிலே-
உன்போல் இஸ்லாமியர் கிடைப்பாரோ?!!
கனவுகளோடும் கண்ணீரோடும்-கங்கைமணி kiY�}