எண்ணம்
(Eluthu Ennam)
ரகசியம் காக்கும் மனம் எத்தனை பொக்கிஷமானது.....இமைக்குள் இருக்கும் விழிகளை... (சபீனா பகுருதீன்)
06-Nov-2022 6:16 pm
ரகசியம் காக்கும் மனம் எத்தனை பொக்கிஷமானது.....
இமைக்குள் இருக்கும் விழிகளை போன்று.....
சபீனா பகுருதீன் 🖋️
ரகசியம் காக்கும் மனம் எத்தனை பொக்கிஷமானது.../இமைக்குள் இருக்கும் விழிகளை... (சபீனா பகுருதீன்)
06-Nov-2022 6:13 pm
ரகசியம் காக்கும் மனம் எத்தனை பொக்கிஷமானது.../
இமைக்குள் இருக்கும் விழிகளை போன்று..../
சபீனா பகுருதீன் 🖋️
விடியும் நாள்
எந்நாளென்று அறியாது
நேற்று இன்று நாளை என்று
சொல்ல பழக்கிவிட்டது கொரோனா...
வாரத்தில் ஏழு நாளும் மறைந்து
மாதத்தின் முப்பதும் கலைந்து
மூன்று நாட்களை கொண்டே
நகர்கிறது இக்காலம் .....
காமராசரை போலவோ
கலாமை போலவோ
வள்ளலாரைப் போலவே
வள்ளுவரைப் போலவோ
வாழ்ந்து காட்டாவிடினும் - உன்
வழியில் சிறப்பாய் வாழ்ந்து விடு...
இவனைப் போல வாழ் என்று
இவ்வுலகம் சொல்லாவிடினும்
இவனைப் போல வாழ்ந்து விடாதே என்று சொல்லாத அளவு வாழ்ந்திடு....
மற்றவருக்கு பயந்து வாழாதே
மனசாட்சிக்கு பயந்து வாழ்ந்திடு... மரணத்திற்குப் பிறகும் - பலர்
மனதில் வாழும் பாக்கியம்
நீ பெற்றால் வாழ்க்கை வரலாறே....
பிரம்படியின் வலியையும்சொல்லடியின் வலியையும் பிரிவு தரும் வலியையும் ஏமாற்றத்தின்... (Jeba)
18-Sep-2022 8:14 pm
பிரம்படியின் வலியையும்
சொல்லடியின் வலியையும்
பிரிவு தரும் வலியையும்
ஏமாற்றத்தின் வலியையும்
துரோகம் இழைக்கும் வலியையும்
துன்பத்தினால் வலியையும்
காயத்தின் வலியையும்
மனக்காயத்தின் வலியையும்
இழப்பின் வலியையும்....
இத்தனை இத்தனை விதமாய்
இன்னும் எத்தனையோ வலியை உணர்ந்தாலும்....
இதே போல தான்
மற்றவருக்கும் வலிக்கும்
என்ற வலியை உணராததாலே
வலி இங்கே நிரந்தரமாகி விட்டது...
அமைதியாக காட்சி தரும்அதிகாலைப் பொழுது...ஆழ் உறக்கத்தில் உலகமேஆழ்ந்து இளைப்பாறஆடவனே... (Jeba)
18-Sep-2022 8:04 pm
அமைதியாக காட்சி தரும்
அதிகாலைப் பொழுது...
ஆழ் உறக்கத்தில் உலகமே
ஆழ்ந்து இளைப்பாற
ஆடவனே உன் பெண்ணின் மனம்
ஆசையாக தவிக்கிறது அன்பிற்கு..
அடையாளம் இல்லா அன்பு தான்..
அவசியமானது பெண்ணவளுக்கு...
ஆசைக்காக ஏங்கவில்லை ஆதரவிற்காக தவிக்கிறாள்...
அன்பு கொண்ட உன் நெஞ்சில்
அழுத்தமாக முகம் புதைத்திட்டால்
அனைத்தையும் எதிர் நீச்சலோடு
அழகாக கடந்திடுவாள்...
அன்பாய் அவளை அணைத்திடு
அன்பால் அவளை மீட்டிடு
இப்படிக்கு,
பெண்ணவளின் இதயம்
கடலும், காதலும்!
வருகை தரும் பறவையின்
கால் தடங்களை அழித்து விட்டு
கோபமாக இருப்பது போல்
கால் தடங்களை அழித்து விட்டு
கோபமாக இருப்பது போல்
பாசாங்கு செய்கிறது கடல் அலை!
அறிவு எத்தனை பெரித்தென்றுஆசிரியர் அறிவுரை வழங்கியபோது அறியவில்லை,பருவாசிரியர் உணர்த்திய... (சபீனா பகுருதீன்)
05-Sep-2022 7:26 pm
அறிவு எத்தனை பெரித்தென்று
ஆசிரியர் அறிவுரை வழங்கியபோது அறியவில்லை,
பருவாசிரியர் உணர்த்திய அறிவுரையாடலே போக்கிஷமென்று உணர்கிறோம்..
போராட்டம்கருவறை நான் அடைந்திட கருத்தாய்அங்கு வளர்ந்திட கலைகள் பலதை... (சுரேக்கா)
03-Sep-2022 11:18 am
போராட்டம்
கருவறை நான் அடைந்திட
கருத்தாய்அங்கு வளர்ந்திட
கலைகள் பலதை பயின்றிட
கல்வி நோக்கி நகர்ந்திட
கவிகள் பல இயற்றிட
காலமது காத்திருக்கா நிலை கண்டு
கலங்கி நான் நின்றதறியேன்
முடியும் என திடம் கொண்டு
போராட்ட உலகம் தனிலே
போராடி வாழ்வதெல்லாம்
வரமென்பேன்
எத்தனைமுறை எழுதினாலும், தீராத,திகட்டாத,சிந்தனையருவியும், பிரபஞ்சத்தின் ஒரு மாற்றத்தின் கருவித்தான்...சபீனா... (சபீனா பகுருதீன்)
30-Aug-2022 4:45 pm
எத்தனைமுறை எழுதினாலும், தீராத,திகட்டாத,
சிந்தனையருவியும், பிரபஞ்சத்தின் ஒரு மாற்றத்தின் கருவித்தான்...
சபீனா பகுருதீன்✍️
மேலும்...