எண்ணம்
(Eluthu Ennam)
உன்னை நான் தேடுகிறேன் .....
சுற்றி பலர் இருப்பினும்
பற்றிக் கொள்ளும் ஒற்றை பார்வையில் நலம் விசாரிப்பாயே....
அந்த உன்னை நான் தேடுகிறேன்!
இரவுகளை குழப்பி
கனவுகளை எழுப்பி...
விடியும் வரை காதல்
கதைப்பாயே..!
அந்த உன்னை நான்
தேடுகிறேன் ...!
முன் விழும் என்
நெற்றி முடிக்கே...
முன்னூறு கவிகள்
முடிப்பாயே!!
அந்த உன்னை நான் தேடுகிறேன்!
என் கன்னக் குழி
ரசிக்க காதல் பேசி
சிரிக்க வைப்பாயே ...
அந்த உன்னை நான் தேடுகிறேன்!
எட்ட முடியா தூரம்
உன் வானம்
என தெரிந்தும்
சிறகடிக்கும்
என் ஆசைகளும் ....
கண் காணா தொலைவு
கடந்து விட்டாய்
என அறிந்தும்
பின் தொடரும்
என் நினைவுகளும் ....
கானல் நீரில் மீன் பிடித்து,
எட்டுச் சுரக்காயில் விருந்து சமைத்து
காத்திருக்கும்
என் எண்ணங்களும் ....
உன்னை இழந்ததை உணராமலேயே
நினைவுகளில் துடித்துக் கொண்டிருக்கும்
என் இதயமும் .....
உண்மை உணர்ந்த பின்
ஓர் நாள் சொல்லும் ...
உன்னை நான் தேடுகிறேன்
அதனாலே இன்று
கல்லறையில் வாடுகிறேன் என்று...!
தன்னை உருஞ்சுகிறது என்றுதெரிந்தே புழு பூச்சிகளுக்குஉணவளிக்கிறது செடி... (இறையன்பன்)
27-Dec-2024 12:55 pm
*வாய் பேசி*வாய் பேசாக்கைப்பேசி இன்று,பலரின் வாய் பேசியாக...... (செந்தில் வளவன் பி)
13-Oct-2024 9:05 pm
இயந்திரபிப் பணிகாலம் என்னை அழைத்தது கை அடக்க கைபேசியிலும்மடி... (ஜென்னி மத்தேயு)
21-Feb-2024 9:30 pm
இயந்திரபிப் பணி
கை அடக்க கைபேசியிலும்
மடி அணைக்கும் கணினியிலும்
ஓடி போவதற்கும் முடியவில்லை
தேடி செல்லவும் தெரியவில்லை
அப்படி ஒரு பரிவு
இந்த இயந்திரத்திடம்...!
நிலாவே நீ ...-----------------அந்த வானத்தில் நிலவாய் இருப்பதை விட... (முத்துகிருஷ்ணன்கண்ணன்)
13-Feb-2024 1:19 pm
நிலாவே நீ ...
-----------------
அந்த வானத்தில்
நிலவாய்
இருப்பதை விட
இந்த இருளில்
விளக்காய்
இருப்பதையே
என் மனம்
எப்போதும்
விரும்புகிறது .
மாமுகி .
இறையும் செயலும் -------------------------------என்னைச் சுற்றியுள்ள எல்லாரிடமும் ஓர் இறைத்... (முத்துகிருஷ்ணன்கண்ணன்)
13-Feb-2024 1:16 pm
இறையும் செயலும்
-------------------------------
என்னைச் சுற்றியுள்ள
எல்லாரிடமும் ஓர்
இறைத் தன்மையைப்
பார்க்கிறேன் ...
எனவே
என் செயல்கள் யாவும்
எனக்கு
ஆன்மிகமாகவே தெரிகிறது.
மாமுகி .
அசலே ! உங்களுக்கு இந்த
நகல்களின் அன்பு வணக்கம் !
ஒப்பிலா சூரியன் நீங்கள் !
உங்களிடம் வெப்பம் வாங்கி
ஒளிரத் துடிக்கும் நிலவுகள்
நாங்கள் வாழ்த்தி அளிக்கும்
வாழ்த்து மடல்
கொங்கு மண்ணிலே மங்கா புகழுடன்
தங்களுக்கென தனி வழி அமைத்திட்ட
தங்கம் நிகர் எங்கள் தலைவரே !
வார்ப்பட உலகின் வரலாறு எழுதினால்
திருப்பும் பக்கமெல்லாம் உங்களின்
திருநாமம் வீற்றிருக்கும் !
மறுசுழற்சிக் கலையாலே மணல் துகளின்
அற்ப ஆயுளையும் அதிசயமாய்
பன்மடங்கு உயர்த்தி விட்ட
மணலின் மருத்துவர் நீங்கள் !
உங்களின் கைகளில்தான்
விருதுகள் மதிப்புறுகின்றன !
உங்களின் தோள்களில்தான்
மாலைகள் மலைப்புறுகின்றன !
உங்களின் மீது மட்டும்தான்
பொன்னாடையும் பொலிவுறுகின்றது !
தோழமை விருதுபெறும் நீங்கள்
காலகாலமாய் வாழ்வாங்கு வாழ்வென
வாழ்த்தும் வயதில்லை எனினும்
வாழ்த்தி வணங்குகிறோம் !
கைபேசிஅலைபேசியில் தொடர்கிற ஊடல்கள், சிலர் வாழ்வின் மகிழ்வான வாழ்வையும்... (சபீனா பகுருதீன்)
08-Feb-2024 10:43 am
கைபேசி
அலைபேசியில் தொடர்கிற
ஊடல்கள், சிலர் வாழ்வின்
மகிழ்வான வாழ்வையும்
நிலையற்ற வாழ்வாக மாற்றிவிடுகிறது...
சபீனா பகுருதீன்
மேலும்...