தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு எடுத்துச் செல்லும் பொடி எழுத்துக்கள் கட்டுரை படித்தேன். பழைய தமிழ்ப் படங்களை டிவிடியில் பார்க்கும்போது கீழே ஓடும் ஆங்கில மொழிபெயர்ப்பு, படத்தின் சீரான ஓட்டத்தையே சீர்குலைப்பதாகத்தான் இந்தக் கட்டுரையைப் படிக்கும்வரை கருதிக்கொண்டிருந்தேன். இப்போதுதான் அதன் மகத்துவம் புரிகிறது.

ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு சப்-டைட்டில் மாற்ற அந்த இரு மொழிகளிலும் திறமை இருந்தால் மட்டும் போதாது, ஈடுபாடுள்ள எழுத்தாளராகவும் கற்பனை வளத்துடனும் இருந்தால் மட்டுமே இந்தப் பணி சிறப்பாக முழுமையடையும் என்பதை ரேக்ஸ் அவர்களின் கூற்று விளக்கியது.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.