- சிகரம் படிக்க --சிந்தனைக் களம் : தீபாவளி...
- சிகரம்
படிக்க --சிந்தனைக் களம் :
தீபாவளி வருவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே நாள்காட்டியில் அன்றைய சீட்டை மடித்துவைத்து, தீபாவளிக்கு எத்தனை நாள் உள்ளது என்று கணக்கிடும் ஆர்வத்தை பிஞ்சுகள் மனதிலே இச்சமுதாயம் பதித்துள்ளது.
தீபாவளித் தீமைகள்
தீக்காயம்: வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
பணவிரயம்: தேவையற்ற ஆடம்பரம், அதிகப்படியான செலவுகளால் பணவிரயம் ஏற்படுவதோடு, கடனாளியாகவும் ஆகின்றனர்.
வயிற்றுக் கோளாறு: ஒரே நாளில், ஒரே வேளையில் அளவிற்கு அதிகமாக அதிக உணவுகளை, பலகாரங்களை, இனிப்புகளை உண்பதால் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, மருத்துவச் செலவும் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்: ஒரே நாளில் எல்லோரும் வெளியூர் பயணம் மேற்கொள்வதால் போக்குவரத்துப் பற்றாக்குறை, நெரிசல், தவிப்பு, கூடுதல் கட்டணம் என்று பல கேடுகள் வருகின்றன.
கடைகளில் குவிதல்: எல்லோரும் ஒரே நேரத்தில் கூட்டமாகக் குவிவதால், நெரிசல், களவு, தரமற்ற பொருட்கள் என்று பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற கேடு பயக்கும் தீபாவளியைக் கொண்டாடுவதைக் கைவிட்டு அறிவிற்குகந்த பொங்கல் போன்ற விழாக்களை செலவின்றி, சேதமின்றிக் கொண்டாடி மகிழ வேண்டும்.