சிந்தனை... செய்மனமே...3 ============================ கற்றுக்கொள் =============== மானுட வாழ்வில்...
சிந்தனை... செய்மனமே...3
============================
கற்றுக்கொள்
===============
மானுட வாழ்வில்
மனநலம் காக்க....
நினைக்கக் கற்க வேண்டும்,
மறக்கக் கற்க வேண்டும்,
மன்னிக்கக் கற்க வேண்டும்,
வாழ்த்தக் கற்கவேண்டும்,
காணாமல்போன நண்பனை...நினைக்க
வீணாகப் பகையுண்ட பக்கத்து வீட்டாரை...மறக்க
பொறாமை கொண்ட சக ஊழியரை...மன்னிக்க
உறவு விட்டுப்போன உடன்பிறப்பை..வாழ்த்த
அன்போடு நேசிக்க அரிதான மனம் வேண்டும்,
அனைத்துக்கும் ஆண்டவனின் அருள் வேண்டும்..