எண்ணம்
(Eluthu Ennam)
The secret of SHILEDARS பார்த்த பிறகு தமிழில் ஏன் இது போன்ற படைப்புகள் வருவதில்லை என்று
தோன்றியது . தமிழில் பார்க்க கிடைக்கிறது ( hotstar).
எண்ணம் என்ற சிற்பிக்கு திறமைகள் ஏராளம்...
அதனால் தான்
*பாறையை சிலையாகவும் வடிக்கும்,
*இரும்பை இரயில் வண்டியாகவும் மாற்றும்,
*உதவாத கல்லை கூட படியாகவும் மாற்றும்.... எனவே எண்ணத்தின் சீர்மை என்றும் சாதனை தான்....🥰
எங்கள் கைகளில் உலகம்?????? பேஸ்புக். வாட்ஸ்அப், வைபர், இமோ... (நடராஜா தாமரைச் செல்வி)
14-Jun-2021 11:09 am
எங்கள் கைகளில் உலகம்??????
பேஸ்புக். வாட்ஸ்அப், வைபர், இமோ டுவிட்டர்
இன்னும் புதிதாய் பிறந்து கொண்டிருக்கிற
அத்தனை வலையமைப்பிலும்
கண்டதும் காதல்.
ஹாய் பாய் கோபமோ சிரிப்போ
காதலோ…………….. கட்டியணைக்க வேண்டுமா
எங்கள் எண்ணங்களையெல்லாம் திரட்டி
தயாராக இருக்கிறது பொம்மை படங்கள்
எங்கள் உணர்வுகளுக்கேற்ற
உணர்வில்லா பொம்மைகள்
குதித்தோடி சேதி சொல்ல
ஸ்டிக்கர் பொம்மைகள்
யாரும் வயது பார்ப்பதில்லை
அங்கே பார்க்கப்படுவது- ஏதோ
ஒரு செயலியில் அழகான இல்லை இல்லை
அழகாய் தெரியும்படி ஒரு புகைப்படம்
மனம் பரிமாற படுகிறது ஒருவருக்கு ஒருவர்
யாரென தெரியாமல் உலகமே நண்பர்கள்
யார் யார் அவர்கள்
நல்லவர்களா கெட்டவர்களா
ஏமாற்றுகிறார்களா அல்லது ஏமாளியா
எதுவும் தேவையில்லை
புகைப்பட பரிமாற்றங்கள்
அரை குறை ஆடைகளுடன் -சிலர்
அதுவும் இல்லாமல்
அறுபது வயது கிழவிக்கு
இருபது வயது இளஞ்ஞனுக்கு -காதல்
பார்த்தால் காசு பரிமாற்றங்களுக்காய்…..
பதினெட்டு வயது யுவதிக்கும்
எழுபது வயது கிழவனுக்கும்- காதல்
காரணம் புகழுக்கு………………
மேற்கத்திய கலாசாரத்திற்கு –நாமும்
அடிமைகளாய் மாறிவிட்டோம்
ஒருவனை நம்பி காதல் என்று சொல்லி
புகைப்படம் அனுப்பிய
மங்கைக்கு தெரியாது
அவள் நம்பியவனின் நட்பு வட்டாரமே
அவள் நிழல் படம் பார்த்து கொக்கரிப்பது
எத்தனை தற்கொலைகள்
எத்தனை கொலைகள்
எங்கே போகிறது உலகம்
நிஜத்தை மறந்து நிழலை தேடுது மனசு.
எல்லாமே மாயை என்பதை
புரிந்து கொள்ளாமல் காதல்
என்கிற பெயரில் களியாட்டங்கள்
மெசேஜ் என்கிற பெயரில்
தூஷண வார்த்தைகள்
வீடியோ கோல் என்கிற பெயரில்
நேர வீணடிப்புகள்
பத்திரிகை வானொலி
வலையமைப்பு என அத்தனையும்
திரும்ப திரும்ப சொல்கிறது
பல குடும்பங்களின் சீரழிவை
ஆனாலும் பிடிவாதமாய்
புரிந்து கொள்ள மறுக்கிறது
இந்த சமுதாயம்
யாருக்கோ என நினைத்து
தானும் அந்த புதைகுழியில்
நின்று கொண்டிருக்கிறது
வலையமைப்புகள்
எம் கைகளில் இருக்கும் வரப்பிரசாதம்
முடிவெடுத்து கொள்ளுங்கள்
வரமாய் மாற்றுவதும்
சாபமாய் மாற்றுவதும் நாமே.
எதுவுமே தேவையறிந்து
வாழ்வோம் நமக்கென
எல்லை வகுத்து
மீறாமல் நடப்போம்
தாகத்திற்கு தண்ணீர் அருந்தாமல்
அந்த நீர் ஊறிய கிணற்றில்
விழுந்து தான் அருந்துவேன்
என்பதுக்கு முட்டாள் தனம்.
அதுபோல தேவையறிந்து
எமக்கு கிடைத்த வசதியை
பயன் படுத்தினால்
நமக்கேதும் வம்பிள்ளை
வலையமைப்பு வரமா சாபமா
முடிவுக்கு சொந்தக்காரர்
நாம் மட்டுமே.
அனைவருக்கும் உகாதித் திருநாள் வாழ்த்துக்கள்சுந்தரத் தெலுங்கில் சுகமாக பாடி... (பெருவை கிபார்த்தசாரதி)
13-Apr-2021 12:48 pm
அனைவருக்கும் உகாதித் திருநாள் வாழ்த்துக்கள்
வந்தனை செய்தே யுகாதிச் சிறப்பை
சந்தனமாய் மணக்கும் சந்தத் தமிழில்
தந்திடும் நெஞ்சம் தகவாய் வாழ்த்தும்
இச்சையுடன் தெலுங்கில் இனிதே வாழ்த்த
உச்சரிக்கும் சொல்லால் உகாதி மேன்மையுறும்
பச்சடியும் உகாதியன்று பணிந்தே அளிக்கக்
கச்சிதமாய் அன்பைக் கொடுக்கும் புதுயுகம்
முயற்சிமுயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் .முயற்சி எதற்கு வேண்டும்... (LOKANATHAN)
16-Nov-2020 9:06 pm
முயற்சி
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் .
முயற்சி எதற்கு வேண்டும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை நினைத்து அதை அடைய வேண்டும் என்று நினைத்தால் அதற்க்கு முயற்சி அவசியம் முயற்ச்சி செய்தால் நமது குறிக்கோளை அடைந்து விட முடியுமா .
அதற்க்கு திட்டங்கள் தேவை படும் .கால நிர்ணயம் ,இடம் ,பொருளாதார வசதி ,யார் உதவி செய்ய வேண்டும் போன்ற பல காரியங்களை திட்டமிட்டு சேகரிக்க வேண்டும் .அதில் ஒவ்வொன்றின் பங்களிப்பும் எப்படி ,எவ்வளவு இருக்க வேண்டும் என்று திட்டம் இடுதல் அவசியம்
கால நிர்ணயம் மிக அவசியம். வாழ் நாள் முழுவதும் நம் குறிக்கோளை அடைய செலவிட முடியாது .
ஆறு மாதம் ஒரு வருடம் இரண்டு வருடம் இப்படி நிர்ணயம் செய்து பணியாற்ற வேண்டும் .
ஒரு சினிமா பார்க்கிறோம் ,நன்று மோசம் என்று ஒரு நிமிடத்தில் நம் முடிவை சொல்லி விடுகிறோம்.
அனால் அதை தயாரிக்க எத்தனை பேர் உழைத்தார்கள் ,எவ்வளவு காலம் பிடித்தது ,பணம் என்ன செலவாயிற்று
என்பதின் ஒட்டு மொத்த உருவம் தான் முயற்சி .
என்னை சுற்றிஎத்தனை வருத்தங்களும் வலிகளும் கொட்டிக்கிடந்தாலும்அவற்றின் நடுவேபூத்திருக்கும் ஒற்றைரோஜாவாய்...உன்... (ஆதி)
09-Apr-2020 8:40 am
என்னை சுற்றி
எத்தனை வருத்தங்களும் வலிகளும்
கொட்டிக்கிடந்தாலும்
அவற்றின் நடுவே
பூத்திருக்கும் ஒற்றை
ரோஜாவாய்...
உன் அன்பு....
சில நேரங்களில்வலிகளை சொல்ல வார்த்தை கிடைப்பதில்லை...விடிவெள்ளி விழித்தவுடன் விடியல்... (ஆதி)
06-Apr-2020 4:25 pm
சில நேரங்களில்
வலிகளை சொல்ல
வார்த்தை கிடைப்பதில்லை...
விடிவெள்ளி விழித்தவுடன்
விடியல் விழுங்கியதை போல
வார்த்தை தேடலிலேயே முடிந்து போகிறது
எனது வலிகளும்....
அமைதியாய் இருந்தால்அடக்கமான பெண் என்கிறாய்...அதிகம் பேசினால்வாயாடி பெண் என்கிறாய்....அளவாக... (ஆதி)
03-Apr-2020 9:37 pm
அமைதியாய் இருந்தால்
அடக்கமான பெண் என்கிறாய்...
அதிகம் பேசினால்
வாயாடி பெண் என்கிறாய்....
அளவாக பேசினால்
தலைகனம் கொண்டவளாம்....
எல்லா இடத்திலும்
பதில பேசினால்
அதிகபிரசங்கி என்கிறாய்...
கேட்டும் பதில் சொல்லாவிடில்
ஒன்றும் தெரியா மக்கென்கிறாய்..
ஆண்களிடம் பேசினால் குடும்ப
பெண்ணில்லை என்கிறாய்...
வழியும் ஆணிடம் விலகி
போனாலோ அழகில்லாதவள்
என்று ஆர்ப்பறிக்கிறாய்...
அண்ணா என்றாலும் வேண்டா
தம்பி என்றாலும் வேண்டா
உன்னை மட்டும் நண்பனென்றால் உடனிருப்பவனுக்கு வேண்டா..
ஆண் என்றால் நான்
எப்படி பழக...?
ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளுங்கள் ஆண்களே.....!
உங்கள் விருப்பத்திற்கு வாழ
நான் பிறக்கவில்லை....
என்னை என் விருப்படி
வாழ விடு...
யாரும் கிழிக்காத கோட்டுக்குள்
நானே வாழ பழகியவள்... Aathi....
வாழ்க்கை பயணம் - முதுமை
வானவில் வாழ்க்கையில்
மின்னலை போன்ற எண்ணங்கள்
மழையை போன்ற கண்ணீர் துளிகள்
இளங்காற்றை போன்ற இன்பங்கள்
இதயம் வருடும் நினைவுகள்
திரும்பி பார்க்க இயலா இளமை பருவம்
பணம் என்ற மோகத்தின் தாக்கம் -
அறுபத்தில் உணரும் நகைப்பு
திரும்பி பார்க்க இயலா இளமை பருவம்
பணம் என்ற மோகத்தின் தாக்கம் -
அறுபத்தில் உணரும் நகைப்பு
முதுமையின் தொடக்கம் !!!
இவன்
சே.ஜெகதீஸ்வரன்
மேலும்...