லக்க்ஷியா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  லக்க்ஷியா
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Sep-2020
பார்த்தவர்கள்:  1409
புள்ளி:  311

என் படைப்புகள்
லக்க்ஷியா செய்திகள்
லக்க்ஷியா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2023 12:46 pm

வெற்றி தோல்வியின்
மதிப்பு
செயலில் இல்லை
அதன் காரணத்தில்
உள்ளது

மேலும்

லக்க்ஷியா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2023 9:58 am

"எப்போதும்,
எதற்கும்,
எவருக்கும்,
போடலாம்
சோப்பு..

தூய்மைக்காக."

மேலும்

லக்க்ஷியா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2023 9:31 am

" ஊர்க்காவல் "

"அந்த இருட்டு வேளையில் வயக்காட்டு ஓரமாக ஒரு சிறிய வெளிச்சம்.

நெருக்கி வர வர தெரிந்த அந்த கம்பீர உருவம், ஒரு கையில் லாந்தர் விளக்குடன் மறுகையில் குத்தீட்டியுடன்,
'காளஹஸ்தி தேவனுடையது'.
ஊர் காவல் படையின் தலைவன்.

இரவு வயல்களில் வருகிற காட்டுப்பன்றிகளை துரத்தும்
காவலுக்கு இன்று அவர் முறை.

ஐந்து புலிகள் சேர்ந்து வந்தாலும்
நகத்தை வெட்டி கழுத்தில் மாட்டிக் கொள்ளும்,
பத்து யானைகள் சேர்ந்து வந்தாலும் தாக்கி அதன் முடியை மோதிரமாக்கும், அந்த உடலுக்கு இன்று அயர்ச்சி! நடையில்
தளர்ச்சி !
ஏன்? அவரின் அழகான பருவ மகள்.

வெளியே செல்லும் போதெல்லாம் தாயில்லா தன்

மேலும்

லக்க்ஷியா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2022 7:02 am

"கூந்தல் கருமேகங்கள்
காற்றினில் பறக்க,
கண்ட விழிகளில்
ஆசை மின்னல்கள் தெறிக்க,
தாக்கிய காதல் இடியது
இதயத்தை பிளக்க,

இனி என்ன?

உன் காட்டில்
​அடை மழைத்தான்!".​

மேலும்

லக்க்ஷியா - லக்க்ஷியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2022 7:00 am

"உயிரை தருபவள் தாய் என்றால்,
உலகை காட்டுபவர் தந்தை!

நிலத்தில் தவழ வைப்பவள்
தாய் என்றால்,
அதில் நற்பாதையைக் காட்டி
நடக்க வைப்பவர் தந்தை ,

வானத்தை பார்க்க வைப்பவள்
தாய் என்றால்,
அதில் பறக்க கற்றுக் கொடுப்பவர்
தந்தை,

உணவை ஊட்டி வளர்ப்பவள் தாய்
என்றால்,
அதை தேடும் வழியை கற்றுக் கொடுப்பவர் தந்தை,

சோதனையில் உடன் இருப்பவள்
தாய் என்றால்,
அதை சாதனையாக்க கற்று
கொடுப்பவர் தந்தை,

தாய் என்பவள் தெய்வம் என்றால்,
தந்தை என்பவர் அவள் உறையும் கோயிலாகும்,

இரண்டையும் ஜொலிக்க
வைப்பது நல்ல பிள்ளைகள்
எனும் தீபமாகும்".

மேலும்

தங்கள் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏 11-Oct-2022 3:32 pm
அருமையான கருத்துகளை எளிமையான முறையில் சொல்லும் புதுக்கவிதை நன்று. 11-Oct-2022 10:48 am
லக்க்ஷியா - லக்க்ஷியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2022 7:33 am

"காதல் இல்லாமல்
வாழ்க்கை இல்லை,

உண்மை...

ஆனால் காதல் மட்டுமே
வாழ்க்கை இல்லை,

இதுவும் உண்மை..."

மேலும்

தங்கள் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. 🙏🙏 28-Sep-2022 5:03 pm
குறள் வெண்பா இன்னும் புரிகிலர் இத்தத் வமதனை இன்னும் கிறுக்குகிறார் வீண் நல்ல தத்துவம் 27-Sep-2022 8:09 pm
லக்க்ஷியா - லக்க்ஷியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2022 9:20 am

"வானம் வசப்படும்..

நாம் சிறகுகளை
வளர்த்து கொண்டால்."

மேலும்

தங்கள் கனிவான கருத்துக்கு மிக்க நன்றி. 🙏🙏 01-Sep-2022 8:51 pm
சின்ன வரிகளுக்குள் சிறப்பாகச் சொல்லப்பட்ட பதிவு 01-Sep-2022 6:28 pm
லக்க்ஷியா - லக்க்ஷியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2022 6:40 pm

"எல்லா பாதையும்
அடைத்து விட்டாலும்

ஒரு அடி எடுத்து
வைத்தால்,

புதுப்பாதை
உருவாகிவிடும்."

மேலும்

தங்கள் கனிவான கருத்துக்கு மிக்க நன்றி. 🙏🙏 30-Aug-2022 7:06 pm
அருமை. தன்னம்பிக்கைதான் வாழ்வின் ஆதார சுருதி. வாழ்த்துக்கள். 30-Aug-2022 6:44 pm
லக்க்ஷியா - லக்க்ஷியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Oct-2021 10:43 am

" அன்றைக்கு எனக்கு "காய்ச்சல்'. மருத்துவமனைக்கு என்னை என் கணவர் அழைத்துச் சென்றார். Clinic வாசலில் நானும், அவரும் அமர்ந்து இருந்தோம். உடம்பு ஒரே தள்ளாட்டமாக இருந்தது, தலையை குனிந்து அமர்ந்திருந்தேன்.

அப்போது "என்னங்க? எப்படி இருக்கீங்க, உடம்புக்கு என்ன? என்று குரல் கேட்டது. என்னுடைய பழைய தோழி. பல வருடங்களாக
தொடர்பு விட்டு போய் விட்ட நிலையில், எனக்கு எதிரில் !

ஆச்சரியமாக இருந்தாலும் அவர்களுடன் பேச முடியவில்லை 'ஜுரம்' என்று முனகினேன். "அப்படியா, உடம்பை பார்த்துக்கோங்க" என்று அவர்
கூறி விட்டு அமைதியானார்.

டாக்டர் அழைத்ததும் உள்ளே சென்றேன், செக்கப் முடிந்து வெளியே வந்தவுடன் சிற

மேலும்

தங்கள் கனிவான கருத்துக்கு மிக்க நன்றி. 🙏🙏 24-Aug-2022 6:10 pm
அருமையான பதிவு 24-Aug-2022 10:21 am
லக்க்ஷியா - லக்க்ஷியா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Jun-2021 10:37 am



                  "பசிக்கொடுமை"

1  "உலகில் 'பசி'  என்ற ஒன்று ,            இல்லாவிட்டால் ,
     
     வாழ்வில்  'ருசி'  என்பதே 
     இல்லை.
​         

2.  ஒரு  'கவளத்தை'  புசித்து 
      விட்டால் போதும், 
      
      எந்த  "அவலமான'               
      வாழ்க்கையும் கூட
      ரசித்து விடும்.


 3.  'கல்லாத மூடர்'  ஆனாலும்,           ' பயமில்லாத வீரன்'           
      ஆனாலும்,
 
       பசித்திட்டால்,  பத்தும் 
        பறந்து விடும்.


4.  ' முற்றும்  துறந்த. 
       முனியானாலும்',       
      
       கற்றுத்தேர்ந்த கவி' 
       ஆனாலும், 

       வயிற்றை பற்றும் பசி 
       வந்து விட்டால்,      
      
       சுற்றும் முற்றும் மறந்து
        விடும்.      


5.      வண்ணத்தை குழைக்கும்,          "ஓவியனானலும்",
        
          எண்ணத்தை செயலாக்க 
          உழைக்கும்  '  
         'தலைவனானலும்',          
 
        அன்னத்தை கண்டு 
        விட்டால் குழைவான்,
        
        கிண்ணத்தில் அதை 
        போட வேண்டி இழைவான்.


6.      'உலகம் இயங்குவது'    
         பசிக்காகதான்,
      
        ' உடல்கள் உழைப்பதே"  
          பசிக்காகத்தான்,    
     
        உயிர்கள் ஓடுவதும், 
        
         உண்மையே 
        ஒடுங்குவதும்!       
      
   பசி,  பசி, அந்த  'பசிக்காக
   தான்'.     
    


7.     தனி ஒருவன்
        பசித்திருந்தால்,
       இந்த உலகமே கூட 
       அழிந்து விடலாம்,

       இதை நான்  கூறவில்லை, 


       பசியின்  கொடுமை
        அறிந்து      
       கொண்ட  'நாக்கு',
      
        கற்றுணர்ந்த அறிஞர் 
       பெருமக்கள்  சொன்ன
        'வாக்கு.'        


8.    இனி யாரும்  'யோசிக்க'    
        கூடாது,
        பசி என்று யாரும்  '
         யாசிக்க'   கூடாது!.

       பசி பிணியை,
       போக்கிடுவோம்! 
       
       வசிக்கின்ற உலகை 
       என்றென்றும்,
       காத்திடுவோம்".

                          -----------

மேலும்

லக்க்ஷியா - லக்க்ஷியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Apr-2021 12:32 pm

" செய்திடுவோம் ஒரு விரல் புரட்சி!

தேவையில்லை அதற்கென தனி ஒரு பயிற்சி!

நடந்தது, நடப்பதை நினைத்து பார்க்க ஒரு சிறு முயற்சி,
செய்து விட்டால் போதுமே
நடந்திடும் புது எழுச்சி !

வாக்காளர்களே! உங்களது மலர்ச்சி,
அதில் தான் உள்ளது வெற்றியின் சுழற்சி !

வாக்குகளால் நீங்கள் செய்ய போகும் அந்த புரட்சி!
தந்திடும் நாளைக்கு அதிவேக வளர்ச்சி !

எனவே,

சிறிதும் அடையாதீர் அயர்ச்சி ,
உங்கள் விரல்களே தோற்றுவிக்கும்
புது சமுதாய மறுமலர்ச்சி!

ஆகவே, 'கவனம்'!

வாக்குகள் மாற வேண்டாம் 'நோட்டாக'
ஆகட்டுமே அவையே தீமைக்கு 'வேட்டாக'.

ஆற்றிடுவோம் வாக்களித்து
நம் ஜனநாயக கடமை!
போற்றிடுவோம் வா

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே