எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எங்கள் கைகளில் உலகம்????? ? பேஸ்புக். வாட்ஸ்அப், வைபர்,...

            எங்கள் கைகளில் உலகம்?????


 பேஸ்புக். வாட்ஸ்அப், வைபர், இமோ டுவிட்டர் 
இன்னும் புதிதாய் பிறந்து கொண்டிருக்கிற
 அத்தனை வலையமைப்பிலும்
 கண்டதும் காதல்.  

 ஹாய் பாய்  கோபமோ சிரிப்போ
  காதலோ……………..  கட்டியணைக்க வேண்டுமா
 எங்கள் எண்ணங்களையெல்லாம் திரட்டி 
  தயாராக இருக்கிறது  பொம்மை படங்கள்
  
  எங்கள் உணர்வுகளுக்கேற்ற 
 உணர்வில்லா பொம்மைகள் 
  குதித்தோடி சேதி சொல்ல 
  ஸ்டிக்கர் பொம்மைகள்  

  யாரும் வயது பார்ப்பதில்லை
  அங்கே பார்க்கப்படுவது- ஏதோ 
 ஒரு செயலியில் அழகான இல்லை இல்லை  
அழகாய் தெரியும்படி ஒரு புகைப்படம்   

 மனம் பரிமாற படுகிறது  ஒருவருக்கு ஒருவர்  
 யாரென தெரியாமல்  உலகமே நண்பர்கள்
 யார் யார் அவர்கள்
  நல்லவர்களா கெட்டவர்களா
  ஏமாற்றுகிறார்களா அல்லது ஏமாளியா 
 எதுவும் தேவையில்லை   

 புகைப்பட பரிமாற்றங்கள் 
 அரை குறை ஆடைகளுடன் -சிலர் 
 அதுவும் இல்லாமல் 

 அறுபது வயது கிழவிக்கு 
  இருபது வயது இளஞ்ஞனுக்கு -காதல் 
 பார்த்தால்  காசு பரிமாற்றங்களுக்காய்…..  

பதினெட்டு வயது யுவதிக்கும் 
 எழுபது வயது கிழவனுக்கும்- காதல் 
  காரணம் புகழுக்கு………………    

மேற்கத்திய கலாசாரத்திற்கு –நாமும் 
  அடிமைகளாய் மாறிவிட்டோம்
 ஒருவனை நம்பி காதல் என்று சொல்லி 
  புகைப்படம் அனுப்பிய
 மங்கைக்கு தெரியாது 

அவள் நம்பியவனின்  நட்பு வட்டாரமே 
அவள்  நிழல் படம் பார்த்து கொக்கரிப்பது   
 எத்தனை தற்கொலைகள்
  எத்தனை கொலைகள் 

 எங்கே போகிறது உலகம்  
நிஜத்தை மறந்து  நிழலை தேடுது மனசு.  
 எல்லாமே மாயை என்பதை 
 புரிந்து கொள்ளாமல் காதல்
 என்கிற பெயரில் களியாட்டங்கள்  
மெசேஜ் என்கிற பெயரில்  
தூஷண வார்த்தைகள்
  வீடியோ கோல் என்கிற பெயரில்
 நேர வீணடிப்புகள்    

 பத்திரிகை வானொலி
 வலையமைப்பு என அத்தனையும் 
  திரும்ப திரும்ப சொல்கிறது
  பல குடும்பங்களின் சீரழிவை

ஆனாலும்  பிடிவாதமாய்
 புரிந்து கொள்ள மறுக்கிறது
 இந்த சமுதாயம் 

 யாருக்கோ என நினைத்து 
  தானும் அந்த புதைகுழியில்
  நின்று  கொண்டிருக்கிறது  

  வலையமைப்புகள்  
எம் கைகளில் இருக்கும்  வரப்பிரசாதம் 
 முடிவெடுத்து கொள்ளுங்கள் 
  வரமாய் மாற்றுவதும்
 சாபமாய் மாற்றுவதும் நாமே. 

 எதுவுமே தேவையறிந்து
 வாழ்வோம் நமக்கென 
எல்லை வகுத்து
 மீறாமல் நடப்போம்    

தாகத்திற்கு  தண்ணீர் அருந்தாமல்
 அந்த நீர் ஊறிய கிணற்றில் 
  விழுந்து தான் அருந்துவேன் 
 என்பதுக்கு முட்டாள் தனம். 

 அதுபோல தேவையறிந்து
 எமக்கு கிடைத்த வசதியை 
  பயன் படுத்தினால் 
  நமக்கேதும் வம்பிள்ளை  

 வலையமைப்பு வரமா சாபமா
 முடிவுக்கு சொந்தக்காரர்
 நாம் மட்டுமே.         

நாள் : 14-Jun-21, 11:09 am

மேலே