எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மழைத்துளிகளால் நனைந்த இலைகள்... காற்றில் அசையும்... மழை நின்ற...

மழைத்துளிகளால் நனைந்த இலைகள்... 
காற்றில் அசையும்... 
மழை நின்ற பின்பும்.... 
இதழ்களால் மழைத்துளிகளைத் தூவும்...
அன்றில்  பறவை  உன்னை  அப்பொழுது  பார்த்தேன்...
அனைத்தும்  இழந்தவனாய் நின்றேன்.....
அழகான உன் கண்களில் விழுந்தேன்....
ஆறு அறிவினையும் தொலைத்தேன்....
பனி இதயம் நீ... 
அதில் உறைந்தேன்... 
நான் காதல் செய்யும் 
சிறு மழைத்துளி...
ஆணாய் நான் இருந்தும்... 
வீணாய் இருந்தேன்.... 
உன் அருகில் வர தீயாய் பயந்தேன்....
என் காதல் ஏற்பாயா... 
பெண்ணே... 
இல்லையெனில்... 
முகம் மறைத்து வெறுப்பாயா....
என்னுள் பல தயக்கம்... 
எனக்கு என்ன தகுதி உள்ளது.. 
உன்னை காதல் செய்ய....
என்பதற்கு என்னிடம் இல்லை எதும் ஓர் விளக்கம்...🌧🌧 bmh arun☔☔

பதிவு : பிஎம்ஹெச்
நாள் : 16-Aug-17, 4:59 am

மேலே