நான் முதலமைச்சர் ஆனால் முதலமைச்சர் கனவுல தமிழ் நாட்டுல...
நான் முதலமைச்சர் ஆனால்
முதலமைச்சர் கனவுல தமிழ் நாட்டுல
பல பேரு வருச கட்டி நிக்கிறப்போ நமக்கு
அந்த வாய்ப்ப இங்க எனக்கு கொடுத்து
இருக்காங்க!
சரி.. நெஜமாவே முதல் அமைச்சர் ஆயிட்டா ?
என்ன செய்யலாம் அப்படின்னு ராப்பகலா
படு பயங்கரமா யோசனை பண்ணின விளைவுதான்
இது. இத மொக்கையா எடுத்துகிரவங்க மொக்கையா
எடுத்துக்கலாம், சீரியஸா எடுத்துகிரவங்க சீரியஸா
எடுத்துக்கலாம்.
அதாவது!''சிறந்த குடி மக்களை உருவாக்கும் திட்டம்''
பத்தாவது வரை படிச்சவங்களுக்கு 1 புள்ளி
+2 படிச்சவங்களுக்கு 2 புள்ளி
டிகிரி படிச்சவங்களுக்கு 3 புள்ளி
அதுக்கு மேல படிச்சவங்களுக்கு 4 புள்ளி
ரத்த தானம் பண்ணினா ஒரு தடவைக்கு 2 புள்ளி
5 தடவை ரத்த தானம் பண்ணினா போனஸ் 5 புள்ளி
கண் தானம் பண்ணினா 10 புள்ளி
ஓட்டு போட்டா 2 புள்ளி
தொடர்ந்து 3 தடவை ஓட்டு போட்டா போனஸ் 5 புள்ளி
ஒரு குழந்தை பிறந்த உடன் குடும்ப கட்டுப்பாடு பண்ணிகிரவங்களுக்கு
5 புள்ளி 2 குழந்தை பிறந்த உடன் பண்ணிகிரவங்களுக்கு 2 புள்ளி
அஞ்சு வருஷம் எந்த போலீஸ் கேஸ் ஏதும் இல்லாதவங்களுக்கு 5 புள்ளி
வருமான வரி கட்டினா 5 புள்ளி
புள்ளைங்கள குறைஞ்ச பட்சம் பத்தாவது வரை படிக்க
வைச்சா 5 புள்ளி
சாலை விதிகளை சரியா கடை பிடிச்சா 5 புள்ளி
( சாலை விதிகளை சரியா கடை பிடிக்கிறத எப்படி
கண்டு பிடிக்கிறது? அது யோசனைல இருக்கு )
இப்படி அதிக புள்ளிகள வாங்குறவங்களுக்கு
சிறந்த குடிமன், குடிமகள் சான்றிதழ் வழங்க
படும். புள்ளிகள் வழங்குதல் அந்தந்த துறைகளில்
பெற்று கொள்ளலாம்.
இதற்கென தனி அமைச்சகம் உருவாக்க படும்.
இதனால் என்ன பலன் ,,,
சிறந்த குடி மக்களுக்கு வங்கி கடன் வழங்குதல்
எளிதாக்கப்படும்.
இலவச மருத்துவ காப்பீடு வழங்க படும்.
கல்வி துறையில் இவர்களுக்கென தனி இட
ஒதுக்கீடு வழங்க படும்
ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு
கணிசமான அளவு பென்சன் வழங்க படும்.
பஸ்,ரயில்,விமான கட்டணங்களில் சலுகை
அளிக்கப்படும்
மேலும் ஆலோசனைகள் உங்களிடம்
எதிர்பார்க்க படுகிறது.