எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒளிகள் துயிலும் இரவினில் மட்டும் காதல் பயிலும் குயில்கள்...

ஒளிகள் துயிலும் இரவினில் மட்டும்
 காதல் பயிலும் குயில்கள் இரண்டு
மெய்யிலும் பொய்யிலும் கற்பனை 
கூடு கட்டி கண்ணுக்குத் தெரியாத 
நுன்னலை காதல் கொண்டு
கண்ணுக்குள் விழுந்த தூசி காணா
உடலுக்கும் ஊடலுக்கும் வாழ்வை
தொலைக்கும் நிலையில் ஒரு சமூகம் 

பொன்னுக்குள் பெண்ணை அடக்கி
விருப்பங்களை இலையில் முடக்கி
கல்யாண வலைதளங்களில் விஞ்ஞான
கல்யாணமாம்? பதி யார்? பத்தினி யார்?
மொட்டாகி மலரும் வரை பார்த்துக்கொண்டு
வாடிய உடன் தேடிய மணம் நிலைக்காது
இதுவும் ஒரு சமுதாயம் 

இவ்விரு சமுதாயமும் ஒன்றுதான் 

பதினெட்டு வரை வீடும் ஏடும்
பதினெட்டிற்கு பின் அவனும் நாடும்
என்ற வாழ்வியல் கல்வியை கற்பிக்கும்
சமூகம் சிறக்கும்


பதிவு : Maxin
நாள் : 30-Oct-17, 6:44 pm

மேலே