கோடி தவிப்புக்களுடனான என் இரவு இவ் இராப்பொழுது புலர்ந்துவிடக்...
கோடி தவிப்புக்களுடனான
என் இரவு
இவ்
இராப்பொழுது
புலர்ந்துவிடக் கூடாதெனும்
உள் மன ஆதங்கம்❤️
நான் உன்னவனாயும்
நீ என்னவளாயும்
வாழும் இறுதி கட்ட
இந்நிமிடங்களின்
ஆர்ப்பரிப்பு❤️
பரிதவிப்புடனான நம்
பரஸ்பர உரையாடல்களை
மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திச்
செல்லும் மெல்லிய தென்றல்❤️
நான் செல்லப்போகும்
இடங்களெல்லாம்
உன் எழில் கொஞ்சும் வதனம்
தோன்றப் போகும் ஏக்கம்❤️
உன்னை மீட்டும்
வீணையாய் நானும்
நாதமாய் நீயும்
சென்ற தடங்கள்
கோர்த்த கரங்கள்❤️
எப்போதும் இனி வராத
அந்த இராகங்கள்
நினைவுகளின் சங்கமமாய்❤️
அந்த நிலவுக்கு கூட
தெரிந்திருக்கும் போல
என்மனம் போன்றே
அதுவும் இன்று இருளாகவே❤️
அமாவாசையாம்
என் மனதுக்கு கூட
அமாவாசை தானே...இன்று !
விடியும் நிமிடங்கள்
மணமாலையுடன்
மங்கலகரமாய்
மன மகிழ்வுடன்
மணப்பந்தலில்
மணவாளனுடன்
தேவதை - நீ 👩🔧
ஆணான காரணத்தால்
அழுதிடவும் முடியாமல்
வஞ்சனை செய்தோரை
நிந்திக்கவும் முடியாமல்👨🎤
சிந்தனை வெறுமையாக
மனமெங்கும் ரணமாக
ஆறாத வடுவாய்
உன்நினைவுகளின்
சுமைகளுடன்
விடியாத இரவின்று
வேண்டுமென
வேண்டுகிறேன்
மீண்டுமொரு
பிறப்பிலேனும்
வேண்டுமடி
என்னவளாய்
நீ எனக்கு...!❤️❤️❤️
💜கவிதா லலித்💜