எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குழந்தையைப் போல் அடம்பிடித்து ஒரு கவிதை கேட்கிறாய், இத்தனை...

குழந்தையைப் போல் அடம்பிடித்து 
ஒரு கவிதை 
கேட்கிறாய், 

இத்தனை நாள் 
இறந்து கிடந்த கவிஞன் அல்லவா 
உன்னால் உயிர் பெற்றேன்!

 உனக்குத் தெரியுமா ?
உன் விரல் பட்ட இடத்தில் 
உன் கால் 
பட்ட இடத்தில் 
என் கண் குடியிருந்தது!

பலபேர் இதயம் உடையாமல் தப்பியிருந்திருக்கும், 
நீ கண்ணடித்திருந்தால்.. ஆனால் 
கலவரம் 
என்னவோ எனக்குள்தான்!

நீ கொஞ்சம் 
உன் கூந்தல் வெள்ளை மல்லிகை 
அசைத்து 
சமாதானம் செய்து வைய்யேன்! 
"கலவரக்காரி"....

பதிவு : ahmadh yazir
நாள் : 3-Jan-18, 9:43 am

மேலே