எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அதே கனவு தான் 
அதே ஏக்கம் தான் 
இன்னும் 
யாரோ ஒருவரை 
நேசிக்கிறாய் 
யாரோ ஒருவரால் 
நேசிக்கப்படுகிறாய் 
என்ற நம்பிக்கையிலேயே 
கவிதை எழுதுகிறேன் 

ஆசையெல்லாம் தீர்த்தது 
என்ற வரியை 
எப்படி எல்லாம் 
எழுத நினைத்தேன் 
தெரியுமா ?

தூரத்து நிலா கூட்டில் 
விசும்பும் வானத்தை 
என்ன செய்வது?

கவிதை எழுத 
வேண்டுமென்ற
அவாவை 
எப்படி விட்டொழிப்பது?

மூன்று தினங்களுக்கு மேல் 
உன் நினைவை 
எப்படி முடி மறைப்பது?

உன்னை மறுதலிக்க 
என்ன காரணம் சொல்வது ?

உனக்காகத்தான் 
எழுதுகிறேன்  
உனக்குத் தெரியுமா ?

என் கடைசி வரியின் 
அர்த்தம் 
உனக்கு புலப்பட்டதா?

நான் எழுதாத 
ஏதேனும் ஒன்றை 
நீ மிச்சம் 
வைத்திருக்கிறாயா?

இமைக்கு கீழே மூலூம் 
நெருப்பை 
ஏன் கண்ணீரால் எரிக்கிறாய்?

இன்னும் உன் மறதியை ஒத்தி போடுவது எது? 
எல்லாவற்றுக்கும் ஒரே பதில் தான்.

அவளைக் கடந்து விட்டேன் என்பதெல்லாம் வெறும் கவிதைதான் இன்னும் அவள் நீளமானவள்.....


மேலும்

ஜில்லென்ன வீசும் தென்றல்
என்னை ஈர்க்கும் உனது பார்வை..
உன் வலையலின் ஓசை 
என்னை மயக்கி 
உன் கூந்தலோரம் மறைகிறது...
ஜிமிக்கி கம்மல் என்னிடம் போர்தொடுக்கிறது..
உன் கன்னத்தில் விழுந்த நீர் துளிகள் பூக்களில் மேல் 
பனித்துளி தங்குவது போல் 
தங்கி செல்கிறது..
உன்னை பிரிய மனமில்லாமல் 
என்னிடம் வந்து தவிக்கிறது..
நானோ உன்னை ரசித்ததால் மெய்மறந்து நிற்கிறேன்..
அடியே!.. என்னை ஈர்த்ததின் நோக்கம் என்ன..? இருந்து பதில் சொல்லி விட்டு செல்லடி..துள்ளி குதித்திடும் என் தேவதையே...

மேலும்

கருமேகத்துடன் மழைத்துளிகள் 
மண்ணில் விழும் நேரம்...

ஜன்னல் ஓரம் 
இருக்கையில் அமர்ந்தேன்..

அந்த மழை துளிகளை ரசிப்பதற்கு..

அந்நேரம் வீசி செல்லும்
தென்றலை போல..

என்னை உரசி செல்கிறது 
உனது கொள்ளை பார்வை!..

அழகே...
நீ உடுத்திருக்கும் உடை
அந்த உடைகளுக்கே பெருமை சேர்க்குதடி..!

தேவதையே கண்ட நொடியில் 
ரசிக்க இருந்த மழைத்துளியே ரசிக்க மறந்தேன்...

ஏணடி என்னை இப்படி மாற்றினாய்?..

மேலும்

என் காதலே..


முன்னுரை முடிவுரை இன்றி இல்லை கட்டுரை.
நீ இன்றி நான் இல்லை என் வாழ்வு முடியும் வரை.

மேலும்

மௌனம்💔

என்னுள் ஏற்படும் மாற்றங்களை கூட உணர மறக்கிறேன்💔😔

உன்னுடைய மௌனத்தால்💔😶

மேலும்

💔 *யாரை விரும்புகிறேன்* 💔


யாரை விரும்புகிறேன் என்று தெரியாமலே விரும்புகிறேன்.🌹

 என்னுடன் சேர்த்து உன்னையும்🖤🖤🖤

மேலும்

  என் உயிர் காதலே என்னை   விட்டு எங்கு  சென்றாய்   

 உன்னை காண ஏழு  கடல் தண்டி  வருகிறேன் 
  உன்   காவலுக்கு எல்லாம் விடையாக  வருகிறேன் 
  என்னை ஒரு கணம் நிமிர்ந்து  பாரடி  என் கண்மணியே………………….        

மேலும்

 என் காதலே என்னவளே ..............

 என் கண்மணியே . ..... 
 நீ தூங்கும் நொடி உன்னை என் விழி மூடாமல் ரசிக்க ......... 
 நீ விழிக்கும் நொடி உன்னை தொட்டு அணைக்க ............. 
 இது  கனவா! நினைவா! என்று தெரியாமல்  தவிக்கின்றேன்............ 
 இது கனவு என்றால் கனவே கலையதே இது நினைவு என்றால் நினைவே மறையாதே .....      

மேலும்

அன்பே!


              என் காதலை வானத்து பறவைகளுக்கு சொன்னேன் என்னை வாழ்த்தியது, கடற்கரை மணலுக்கு சொன்னேன் ஆரவாரித்தது ,பிறகு உன்னிடத்தில் சொன்னேன் மொழி புரியாத போல😏 முகம் சுளித்துக் கொண்டு போகிறாய்🙄 உனக்காக காத்திருப்பேன்☺ இன்று மட்டும் அல்ல என் உயிர் இருக்கும் வரையிலும் இப்படிக்கு உன் அன்பில் நான்😘

மேலும்

நீலமீன்கள்

     - அப்துல் வதுத் 


கண்ணாடிக் குடுவையின் அந்தப்புரம் அமர்ந்து
வண்ணவண்ணமாய் நீந்தும் மீன்களை
 பார்த்துக்கொண்டிருக்கிறாய்..
துள்ளி விளையாடும் மீன்களுடன்
 சேர்ந்து விளையாடும் 
உன் நீலமீன் கண்களை
 நான் ரசித்துக்கொண்டிருக்கிறேன்...

மேலும்

மேலும்...

மேலே