எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஜில்லென்ன வீசும் தென்றல் என்னை ஈர்க்கும் உனது பார்வை.....

ஜில்லென்ன வீசும் தென்றல்
என்னை ஈர்க்கும் உனது பார்வை..
உன் வலையலின் ஓசை 
என்னை மயக்கி 
உன் கூந்தலோரம் மறைகிறது...
ஜிமிக்கி கம்மல் என்னிடம் போர்தொடுக்கிறது..
உன் கன்னத்தில் விழுந்த நீர் துளிகள் பூக்களில் மேல் 
பனித்துளி தங்குவது போல் 
தங்கி செல்கிறது..
உன்னை பிரிய மனமில்லாமல் 
என்னிடம் வந்து தவிக்கிறது..
நானோ உன்னை ரசித்ததால் மெய்மறந்து நிற்கிறேன்..
அடியே!.. என்னை ஈர்த்ததின் நோக்கம் என்ன..? இருந்து பதில் சொல்லி விட்டு செல்லடி..துள்ளி குதித்திடும் என் தேவதையே...

நாள் : 29-Oct-22, 7:33 pm

மேலே