எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உ என் பால் வெண்ணிலா பவளப்பொண்ணிலா நம் மெய்...

உஎன் பால்

என் பால் வெண்ணிலா 
பவளப்பொண்ணிலா 
நம் மெய் என்றமேனி 
இம்மண்ணில் என்றாவது ஒருநாள் பொய்யாக புதைந்துபோகும் . 

ஆனால் நம்ஒன்றோடு ஒன்றாக 
முகம் பதித்து பறிமாரிய 
சுவாசகாற்றும் பாசங்களும் நேசங்களும் 
என்றும் இனைபிரியாது 
நிச்சயம் இப்பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு புள்ளியாக உலாவரும் .. 

அப்போது பறந்து விரிந்த கார்முகிலில் பொண்ணூஞ்சல் அமைத்து 
அதில் அழகு மல்லிகை 
பூந்தளிர் கொடிகளை 
பலநாள் காத்திருந்து நன்னீர் விட்டு இயற்க்கையின் விதியில் படறவிட்டு 
அதன் மொட்டுகளாலும் மலர்களாலும் நருமணத்தை அவ்விடமெல்லாம் தவளசெய்து. 
பன்னீர் ரோஜா இதழ்களை 
இருக்கையில் இடைவிடாது 
நிமிர்த்தி வைத்து .
என் பொண்மகளை அதில் 
அலுங்காது அசையாது அமரவைத்து .
எங்கும் நிசப்தம் நிறைந்து இறைவாழ்த்துக்களாலும் 
தாலாட்டுகளாலும் 
என்னவள் செவிகள் அமிர்தம் பருகிட 
அதில் மெல்லிய பூந்தென்றல் 
அவள் கூந்தல் வாசம் திருடிசெல்ல. 
முகில்களில் இருந்து 
அங்கொன்றும் இங்கொன்றும்மாக  
பல வண்ண மலர்கள் 
நொடிக்கு ஒன்றாக 
அவள் பாத சுவடுகள் எல்லாம் 
பூ மழை பொழிந்திட . 
அதில் எங்கோ ஒரு ஓரத்தில் 
நான் அமர்ந்து 
அவள் பால்முகம் பார்த்து 
இமை அசையாது ரசிப்பேன். 

இது கற்பனை அல்ல அவள் நினைவுகளாலே உருவான சொற்களின் பிணை💕💕💕💐💐💐

நாள் : 17-Jan-18, 9:00 pm

மேலே