எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்கை உயிருக்கு உயிராக காதலித்த காதலர்களின் கடைசி நிமிடம்...!...

வாழ்கை

உயிருக்கு உயிராக காதலித்த காதலர்களின் கடைசி நிமிடம்...!

காதலி விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்து விட்டாள்! அதன் வலி தாங்க முடியாமல் அவன் தினம் தினம் அழுதுகொணடிருந்தான்!

உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஆறுதல் கூறினர்! மறந்துவிடு... இறந்தவள் நீ கண்ணீர் விட்டால் இனி திரும்ப வரமாட்டாள் என்று கூறினர்...!

ஓர் இரவு வேளையில் அழுது கொண்டே உறங்கிவிட்டான்...!

கனவில் அவள் ஒரு மெழுகுவர்த்தி கையில் ஏந்தியபடி பல பெண்களின் நடுவில் அணைந்த மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி நின்றாள்! மற்ற எல்லோர் மெழுகுவர்த்தியும் பிரகாசித்தது!

அவன் அவளிடம் கேட்டான் உன்னுடைய மெழுகுவர்த்தி மட்டும் ஏன் அணைந்தபடி உள்ளது??? என்று...!

அவள் சொன்னால் ''உன் கண்ணீர் நான் ஏற்றிவைக்கும் மெழுகுவர்த்தியை அணைத்து விடுகிறது , நீ கண்ணீர் சிந்தாமல் இருந்தால் தான் என்னுடைய மெழுகுவர்த்தியும் பிரகாசிக்கும்'' என கூறினாள்...

அன்று முதல் காதலிக்காக கண்ணீர் விடுவதை கூட மறந்துவிட்டான்!
ஆனால் அவன் தன் காதலை ஒருபோதும் மறக்க நினைக்கவே இல்லை...!

காதலை கடந்தும் ஒரு வாழ்க்கை உள்ளது நண்பர்களே...

பதிவு : Jilla
நாள் : 23-Nov-13, 2:12 pm

மேலே