எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கை மெல்லியமழை ஒரு குறிப்பிட்ட ஒளியை உருவாக்குகிறது. வானம்...

இயற்கை 


மெல்லியமழை ஒரு குறிப்பிட்ட ஒளியை உருவாக்குகிறது. வானம் மூடியிருந்தாலும் மழைச்சரடுகளின் கண்ணாடிக்குழாய்களுக்குள் அகஒளி ஒன்று உருவாவதனால் நிலம் மிகையில்லாத ஓர் ஒளி பரவி மிளிர்கிறது. காடு சூழந்த வெட்டவெளியில் பச்சைப்புல்வெளி அலையலையாக விரிந்துகிடந்தது. வெயிலில் பார்த்தால் கண்கூசியிருக்கும். மழையில் இதமான பசும்பட்டு. கைக்குழந்தையின் கால்களால் மட்டுமே அந்தப்பச்சைவெல்வெட்டை தீண்டவேண்டும் என்று தோன்றச்செய்யும் மென்மை. மழை சற்றே நின்றபோது எல்லா புல்நுனிகளிலும் மழைத்துளிகள் ஒளிவிட புல்வெளி ஜொலித்தது.

நாள் : 18-Jul-18, 2:55 am

மேலே