நாம் பிறந்த போது யார் யார் வந்தார்கள் என...
நாம் பிறந்த போது
யார் யார் வந்தார்கள்
என நமக்கு தெரியாது...!
நாம் இறந்த பிறகும்
யார் யார் வருவார்கள்
என்று நமக்கு தெரியாது...!
இருக்கும் வரை
பார்க்கும் மனிதர்களிடம்
பழகும் நெஞ்சங்களிடம்
அன்பாய் இருப்போம்...!
பண்புடன் பழகுவோம்...!
மனிதம் காப்போம் ...!
உண்மையாக இருப்போம் ...!
உதவி மகிழ்வோம் ....!
மொத்தத்தில் ,
*மனிதனாக வாழ்வோம்...!
பழனி குமார்