இறைவன் அளந்து கொடுத்துள்ள கொஞ்சத்தை வைத்துக்கொண்டு தன்னிடம் ஏதேதோ...
இறைவன் அளந்து கொடுத்துள்ள கொஞ்சத்தை வைத்துக்கொண்டு தன்னிடம் ஏதேதோ இருப்பதகாவும் தானே பெரியவன் என்றும் தான்தான் ஆள் என்றும் மமதையோடு நடக்கிறான் மனிதன். அந்தோ பாவம்! பரிதாபம்! அழகுத் திமிர், அறிவுத் திமிர், சிந்தனைத் திமிர், அனுபவத் திமிர், பேச்சுத் திமிர், எழுத்துத் திமிர், வித்துவத் திமிர், பட்டத் திமிர், பதவித் திமிர், தலைமைத் திமிர், உத்தியோகத் திமிர், பணத் திமிர், செல்வத் திமிர், குடும்பத் திமிர் என பலவாறான திமிர்கள் மனிதர்களுக்குத் தலைக்கேறி தலைகீழாக நடந்து கொள்கின்றனர். உண்மையை ஏற்றுக் கொள்ளாத, அடுத்தவரைக் கிஞ்சித்தும் மதிக்காத ஆணவப் போக்கு நமக்குள்ளே குடிகொண்டுள்ளது.
படித்த நீதி உரைகள்