எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

33 . பனித்துளியோடு உரையாடல் தொட்டபோது தொலைந்து போனாய்...

33. பனித்துளியோடு உரையாடல் 

தொட்டபோது தொலைந்து போனாய் 
கைப்பட்டபோது கலைந்துபோனாய் 
அருகரமர நினைத்தபோது - ஆவியாய் 
மறைந்து போனாய் - எண்ணங்களை
ஆயிரம் ஆயிரமாய் பிரதிபலிக்கிறாய்
நாம் ஆசையோடு அணைக்கையில் - அழகே 
என்னை ஏமாற்றி செல்கிறாய் 
வெண்பனியே. . .  நல்வெண் முத்தே. . 
வெள்ளைமனதில்லை போலும் உனக்கும் 
விளையாட வரும் வாலிபனை
விம்மி  அழச்செய்கிறாய்
 வினைசெய்யும்  நங்கைபோல 
புல்வெளியில் பூத்து குலுங்குகின்றாய் 
பச்சியிலையில் பாடித்திரிகின்றாய்
நான் புன்னைகையோடு தொட்டால் - ஏனோ
புதிரான்கின்றாய் 
முகிலோடு உறவாடுகின்றாய் 
கதிரோடும் காதல் கொள்கின்றாய்
காளையான்  தொட்டால்மட்டும் - ஏனோ 
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்

ஏனிந்த மோகம் ? 
என்மீது கோபம் 
என்னவளும் சொன்னாலோ 
என்னை நீ தீண்டக்கூடாதென்று! 

மு. ஏழுமலை


 



பதிவு : மு ஏழுமலை
நாள் : 18-Mar-19, 11:06 am

மேலே