எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அப்பா... வேதனையில் தள்ளியது உன் நிகழ்வுதானப்பா... உன்மேல் கொண்ட...

அப்பா...
வேதனையில் தள்ளியது 

உன் நிகழ்வுதானப்பா...
உன்மேல் கொண்ட 
நேசமும் பாசமும் 
நம்பிருந்த குடும்பங்களும் -இன்று 
அநாதையானதே ப்பா...
மாமா அழுதபோதும்
அண்ணன் அழுதபோதும்
தலைகோதி ஆறுதலளிக்க
ஆயிரம் பேர் இருந்தாலும்
உனக்கு ஈடாகுமா ப்பா?
உன் வெள்ளை வேட்டி சட்டைக்கும்
உன் வாகனத்துக்கும் - இருந்த
மதிப்புதான் மீண்டு
வருமா ப்பா?
என் திருமணத்தில் பொட்டிட்ட 
உன் கை ஸ்பரிசம்- இனியெனக்கு
கிடைக்குமா ப்பா?

திருவிழா நேரங்களில்
வானத்தை நோக்கி
வேடிக்கை பார்க்க வைத்த - உன்
தொழிலைதான் மீண்டும்
காண முடியுமா ப்பா? 
இந்த கால பொண்ணுங்க
இப்பல்லாம் இப்படிதான்னு 
என்னையே சில நிமிடம் பார்த்த - உன் கண்களை திரும்ப 
காண முடியுமா ப்பா?
உன்னுடன் முதலும் கடைசியுமாய்
எடுத்த செல்பி கூட 
உனக்கு காட்டலயே ப்பா?

கடைசியாய் துணி சுற்றிய 
உன்னுடல் தொட்ட ஸ்பரிசம்
கூட என் கைக்குள்ளே 
பத்திரமாயிருக்கு ப்பா?

ஆயிரமிருக்கு எழுத..
எழுதி எழுதி என்ன பயன ப்பா? 
நீயில்லையே...
நீயில்லாத வீடும்...
உன்னுறவும்...
வெறிச்சோடியதே...
அழுதழுது ஆற்றினாலும்
ஆற்ற முடியவில்லையே ப்பா...

கடைசிவரை 
முடிவில்லா பயணம் போல
ஆறாத ரணத்தோடு 
பயணிக்க வைத்துவிட்டாயே ப்பா... 

பதிவு : இலக்கியா
நாள் : 28-Mar-19, 8:37 pm

மேலே