நகை வாங்கச் சென்றேன் தங்கையின் மகளுக்கு பகல் வெயிலில்...
நகை வாங்கச் சென்றேன்
தங்கையின் மகளுக்கு
பகல் வெயிலில் அகல் விளக்காக
எரிந்துகொண்டு
நகை வாங்கச் சென்றேன்...
அழகிற்கு அழகு சேர்க்க நினைத்து
நகை வாங்கச் சென்றேன்..!
என் செல்வத்திற்குச் செல்வம் சேர்க்க
நகை வாங்கச் சென்றேன்.. !
அணிகலன்களை அடுக்கிவைத்தார்
முத்தமிட வேண்டிய இடத்தில்
நெற்றிச்சுட்டியா?
மணியாகச் சிரிக்கும் மணிமேகலைக்கு
மணிமாலையா?
இடுக்கண் இல்லா வாழுபவளுக்கு
எதற்குக் கடுக்கன்?
சிட்டிகை நேரத்தில் சிரிப்பாள் மயக்கும்
அவளுக்கு எதற்கு அட்டிகை?
என் மன தோடு இதயத் தோடு வாழ்பவளுக்கு எதற்குக் இரு காதில் தோடு?
மோட்சம் கிடைக்கும் அவள் விரல்களுக்கு
எதற்கு மோதிரம்..?
பேசும் கொலுசிற்கு எதற்கு
காலில் கொலுசு..?
என் தங்கையின் மகள் தான்
தங்க மகளாகிற்றே...
அனிச்சம் பூவிற்கு எதற்கு அணிகலன்?
கேள்வி கேட்ட இந்த வாடிக்கையாளனை வேடிக்கையாகப் பார்த்தார்
நகை வியாபாரி.. !
எழுத்தாளன் நான் இனி எழுதிக்கொள்கிறேன்..
தமிழினி
இது உன் மாமனின் வாழ்த்தணி
இனி உன் புன்னகை அணி...
இப்படிக்கு
எழுத்தாளனாகிய ஏழைமாமன்