எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதை - காதல் என்பது எது வரை? தோற்ற...


    கவிதை - காதல் என்பது எது வரை?

தோற்ற பின்பே ஒரு காதல்
என்றென்றும் நிலைத்து நிற்கிறது
காதலர் உயிரோடிருப்பர் - ஆனால்
நடைப் பிணங்களாய்.

அவனுக்கு சிகரெட்,  மது
இவளுக்கு புலம்பல், வெறுத்தல்
எதுவும் தேவை இல்லை
மனங்களின் சங்கமமே காதல்.

அவரவர் கடமையை 
அந்திமக் காலம் வரை 
ஆற்றினால் போதும்
தாஜ்மஹால் தேவையில்லை.

உடம்பு அரிப்புக்கு
ஒருவன் கூட படுத்து
இயலாமையால் இன்னும்
பலருடன்  படுக்கையைப் பகிர்ந்து

ஏமாற்றினான் எனக் காதலையும்
கொச்சைப்படுத்தி உலகின் 
அனுதாபம் திரட்டுவோரே 
மானமிழக்குமுன் உலகு மறந்ததேன்?

- கே. கனகராஜ் 



பதிவு : kanaga
நாள் : 28-Apr-19, 12:51 pm

மேலே