சிறுபான்மை ,பெரும்பான்மை எனும் மனப்பான்மை நமது சமுதாயத்தில் ஏன்,...
சிறுபான்மை ,பெரும்பான்மை எனும் மனப்பான்மை நமது சமுதாயத்தில் ஏன், எப்படி வந்தது ?
அரசியல் ஒரு முக்கியக் காரணி என்றாலும் நான் அறிந்தவரை பொதுவாக மக்களின் ஆழ்மனதிலும் இந்த எண்ணம் எழுகிறது என்பதை மறுக்க முடியாது நிச்சயம் . இதை பலரிடமும் பேசும்போதும் பழகும் போதும் நன்கு உணர்கிறேன் .
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் சாதி மதமெனும் நச்சுக்காற்றை நாம் சுவாசிப்பதால் தான் .
அகிலத்தில் அனைவரும் சமம் என்கிற நிலை அடித்தளம் முதல் மேல்மட்டம் வரை வந்தால் மட்டுமே , இந்த நஞ்சை நெஞ்சிலிருந்து அகற்ற முடியும். இதை நாம் காண்போமா என்று தெரியாது .
ஆனால் வருங்கால சந்ததிகள் இதை உருவாக்கட்டும் .
பழனி குமார்
பழனி குமார்