எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண் குழந்தை என்றதும் பதரிப்போனேன் உன் முகம் கண்டு...

பெண் குழந்தை என்றதும் பதரிப்போனேன்

உன் முகம் கண்டு மெய் சிலிரத்து போனேன்
நீ தவழ்ந்து வரும் அழகில் பசி மறந்து போனேன்
பட்டாடை கட்டி நடந்த அழகை
பத்திறப்படுத்தினேன்
மழலை குரல் கேட்டு என்னையே மறந்து போனேன்
உன் காலில் கொழுசை அணிந்து
தங்கத்தின் மேல் வெள்ளி உரசும்
ஓசை கண்டேன்
பள்ளிக்கு உன்னை அனுப்பையில்
உன் புத்தகபையாக நானே வந்தேன்
நீ பட்டம் பெருகையில் என்னை நானே பெருமை பேசிக்கொண்டேன்
எனக்கு துணை நின்ற போது
தாயாகவே நினைத்து கொண்டேன்
மணமேடையில் உன்னை கண்டதும்
என் வாழ்வின் லட்சியம் வெறிலை
என எல்லையில்லா ஆனந்தம் கொண்டேன்
நீ பெற்ற செல்வதை வாரியணைத்து
முத்தமிட நான் செய்த புண்ணியம்
என்னவென்று புரிந்தது கொண்டேன்
எத்தனை சந்தோஷங்களை கண்டே
உன் தந்தையாக
இவையெல்லாம் உன்னாலே
என் மகளே.....
                         இப்படிக்கு
உன் சராசரி தந்தை

               இலக்கியாசேதுராமன்.

நாள் : 29-Jul-19, 9:51 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே