உயிரிருந்தும் பிணமானேன்!!! உன்னை ரசிக்க கண்கள் இருக்கு உன்மொழிகள்...
உயிரிருந்தும் பிணமானேன்!!!
உன்னை ரசிக்க கண்கள் இருக்கு
உன்மொழிகள் கேட்கச் செவிகள் இருக்கு
கவிதை படிக்க உதடுகள் இருக்கு
முத்தம் கொடுக்க கன்னங்கள் இருக்கு
உன் கைக்கோர்க்கக் கைகள் இருக்கு
சேர்ந்து செல்லக் கால்கள் இருக்கு
சண்டையிட குழந்தைக் காரணங்கள் இருக்கு
மீண்டும் அனைக்க அன்பும் இருக்கு
நீ வந்துவசிக்க என்இதயம் இருக்கு
அனைத்தும் இங்கே என்னிடம் இருக்கு
இருப்ப தெல்லாம் உயிருடன் இருக்கு
இருந்தும் கூடச் செயலற்றுக் கிடக்கு
உயிரே நீ என்னுடன் இல்லாததால்...!!!
-சூர்யாதமிழ்