இனியாவது செய்வோம் தமிழா தமிழா எழுச்சிகொள் ! தங்கம்...
இனியாவது செய்வோம்
தமிழா தமிழா எழுச்சிகொள் !
தங்கம் போலத் தமிழ்ப்பாவே
தமிழன் நாவில் எழுந்திடுவாய்!
தள்ளா வயதில் தமிழ்ப் பற்று
தமிழன் பெற்றே பயனில்லை !
தமிழ்ப்பால் குடித்தே வளர்ந்திடனும்
தமிழன் என்றே மொழிந்திடனும்
தரணி ஆளப் பறந்திடனும் !
இல்லம் முழுதும் தமிழ்மணக்க
இனியத் தமிழைப் படித்திடனும்
சொல்லும் சொல்லைத் தெளிவாய் நீ
சொல்லிப் பழகிட கற்றிடணும்
நல்ல முறையில் ழகரத்தை
நாக்கை மடக்கிச் சொல்லிடுவாய்
செல்லும் இடத்திஇல் தமிழ் பேசு
செல்லாக் காசாய் பிறராவார்
எழுதம் தமிழைப் பிழையின்றி
எழுதிக் கற்க வேண்டும் நீ
பொழுதைப் போக்க கணினியிலே
பொங்கும் தமிழில் தட்டச்சு
எழுப்பும் ஒலியால் செய்வாய் நீ
எழுதிப் பழகா நிலையினிலே
எழுத்துப் பிழைகள் வந்திடுமே
எதுதான் விளையும் ஆங்கிலத்தால் ?
தமிழை தெளிவாக் கற்ப பாய் நீ
தரணி ஆளப் புறப்பட்டுநீ
தமிழில் புலமைப் பெற்றிட்டால்
தருமே புலமை பன்மொழியில்
பூமியில் ஆட்சி தமிழர் மரபால்
பூத்துக் குலுங்கள் பார்க்காயோ?
தமிழன் என்றே சொல்லடாநீ
தரணி முழுதும் வெல்லடாநீ