rajkavi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  rajkavi
இடம்:  கடலூர்
பிறந்த தேதி :  20-May-1961
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Mar-2011
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  23

என்னைப் பற்றி...

ஆசிரியர்

என் படைப்புகள்
rajkavi செய்திகள்
rajkavi - எண்ணம் (public)
29-Dec-2019 2:32 pm

உயர்வு தரும் வியர்வை
உழைக்க மறந்தவன் ஏழை -ஆனால் 
பிறர் உழைப்பில் வாழ்பவன் கோழை
உழைக்கப் பிறந்தவன் மனிதன் -பிறர் உழைப்பில் 
தழைக்க நினைப்பவன் பித்தன் 
கடின உழைப்பே  வெற்றி -அது 
உச்சத்தில் வைக்கும் போற்றி
உழைத்தால் தொலையும் சனி -உள்ளத்தில் 
விளையும் மகிழ்ச்சிக் கனி
ஓயாமல் உழைக்கும் ஞாயிறு -உழைப்பாளி 
ஓய்வெடுக்கும் நாளோ வாரத்தின் ஞாயிறு
விடுப்பின்றி    உழை - வந்துவிடும்
வருவாய்     திங்களில்
ஊதியம் கிடைத்தால் சிரிப்புத்தான் செவ்வாயில்
சரியாக உழைப்பவனுக்கே -புதன் புத்தி 
உழைப்பவனுக்கே உலகம் -அவன் வாழ்வில்
 வெள்ளி முளைக்கும்
உழைப்பு இருந்தால் படைப்பு
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்  உழைப்பே சிறப்பு 
இயலாமை முயலாமை உழைப்பைச் சுரண்டும் 
உழைக்கும் வரை மனிதன் 
உழைப்பை மதிப்பவன் புனிதன்
உழைப்பின் எச்சில் வியர்வை -என்றும் 
அதுவே போக்கும் சோர்வை -இனி 
உயர்வைத் தரும் வியர்வை
அதுவே உழைப்பவன் போர்வை

மேலும்

rajkavi - எண்ணம் (public)
29-Dec-2019 2:28 pm

எது கவிதை
உள்ளத்து உணர்வே  கவிதை 
வார்த்தை  தொடர்ச்சியே எழுச்சியே  கவிதை
சிந்தை நுழைந்து 
வந்துவிழும் சொல்லே கவிதை 
வாழ்க்கை தத்துவத்தை 
இயற்கை வனப்பை காதல் உணர்வை 
காதில் உரைப்பது  கவிதை
இளமை அழகை 
முதுமை  உயர்வை 
அழுகை சிரிப்பை  
கவலை   அவலம் 
எல்லாம் கலந்து உரைப்பது கவிதை
எண்ணம் கரைவது கவிதை 
வண்ணம்  குழைப்பது கவிதை
விதையில் உறங்கும் விருட்சம் கவிதை
வார்த்தை உடைத்து 
சலசலத்து ஓடும் நீரில்  வீழ்ச்சி கொள்வது கவிதை 
எவரையும் உறங்க விடாது 
கிறங்க வைக்கும் ஒற்றை வார்த்தையும் கவிதை
வார்த்தைகளின்றி அசைவது கவிதை 
இன்பம் தந்தாய் தனிமையும்கவிதை
மொழியில்  விழியில் வழியும்  உணர்வே கவிதை
எழுத்தும் கவிதை 
எழுத்தை கோர்த்து 
நிமிர்ந்து படிப்பதும் கவிதை 
அடித்தும் இடித்தும்  சொல்வது கவிதை
அசையும் சீரும் கவிதையில் சீறும்
கேட்கவே ஆசை  ஊரும்
தூக்கம் விரட்டி 
ஏக்கம்  விளைவிக்கும் கவிதை
வார்த்தைகள் இன்றி அசைவதும் கவிதை
உஷ் என்பதும் கவிதை 
மௌனமாக இருங்கள் 
ஓ ..இதுவும் கவிதை 

மேலும்

rajkavi - எண்ணம் (public)
29-Dec-2019 2:07 pm

                     தமிழ்த் தொண்டன் பாரதி 
தமிழ்த் தொண்டன் பாரதியே காதல் கொண்டான் 
       தமிழ்மீதே! தமிழ் வளர்க்க எளிய சொல்லால் 
தமிழ் கவிதை அவன் தொடுத்தான்! தமிழே வாழ, 
தமிழுக்கு முண்டாசு கட்டியவன்! 
தமிழுக்கே தன் தமிழால் எழுச்சி தந்தான் 
தன்நாடு தன்மக்கள் என்றே  எண்ணி 
தமிழ்நாட்டில் தாலாட்டு  படாதவன் 
தனல்ச்சொல்லால்  தடையுடைத்து அவனே வென்றான்!

நாட்டுக்கு விடுதலையை வேண்டி அன்று 
நாட்டமுடன் பாட்டெழுதி இசைத்தான் பாரீர்!
வீட்டுக்குள் விடுதலையின் உணர்வு தன்னை 
வீரியமாய் பெண்களுக்குள் ஏற்றி வைத்தான் 
நாட்டுக்காய்  கவியெழுதி அன்னியரை 
நாடுவிட்டு நாடுவிட்டு டேய் ஓட்டுதற்கே கொண்டான் நாட்டம்  
பாட்டாலே பாரதியே வேட்டு வைத்தான் 
        பாராள  நினைத்தவன்மேல் உமிழ்ந்து   நின்றான் 



தோட்டா போல் தமிழாலே இயங்க வைத்தான் 
தோல்விகண்டு பாரதியே எழுச்சி கொண்டான் 
காட்டாற்று வெள்ளம்போல் வெள்ளம்போல் புனைந்தான் கவிதை 
கதிரவன்போல் ஆக்கி வைத்தான் நிலவை அன்றே 
சட்டமிட்ட போதிலுமே  திட்டமிட்டு 
      சந்தனமாய் தமிழ்வளர்த்த  மணக்க எங்கும் 
எட்டுதிசை எங்குமவன் புகழே தங்கும் !
       என்றென்றும் அவன் பெருமை உலகம் சொல்லும்

மேலும்

rajkavi - எண்ணம் (public)
29-Dec-2019 1:45 pm

இனியாவது செய்வோம் 
தமிழா தமிழா எழுச்சிகொள் !
     தங்கம் போலத் தமிழ்ப்பாவே 
தமிழன் நாவில் எழுந்திடுவாய்! 
    தள்ளா வயதில் தமிழ்ப் பற்று 
தமிழன் பெற்றே பயனில்லை !
    தமிழ்ப்பால் குடித்தே வளர்ந்திடனும் 
தமிழன் என்றே மொழிந்திடனும் 
   தரணி ஆளப் பறந்திடனும் !
இல்லம் முழுதும் தமிழ்மணக்க 
          இனியத் தமிழைப் படித்திடனும் 
சொல்லும் சொல்லைத் தெளிவாய் நீ 
சொல்லிப் பழகிட கற்றிடணும் 
நல்ல முறையில் ழகரத்தை 
        நாக்கை மடக்கிச் சொல்லிடுவாய் 
செல்லும் இடத்திஇல் தமிழ் பேசு 
       செல்லாக் காசாய் பிறராவார்
எழுதம் தமிழைப் பிழையின்றி 
       எழுதிக் கற்க வேண்டும் நீ 
பொழுதைப் போக்க கணினியிலே 
       பொங்கும் தமிழில் தட்டச்சு 
எழுப்பும் ஒலியால் செய்வாய் நீ 
     எழுதிப் பழகா நிலையினிலே 
எழுத்துப் பிழைகள் வந்திடுமே 
எதுதான் விளையும் ஆங்கிலத்தால் ?

தமிழை தெளிவாக் கற்ப பாய் நீ 
         தரணி ஆளப் புறப்பட்டுநீ 
தமிழில் புலமைப் பெற்றிட்டால் 
       தருமே புலமை பன்மொழியில் 
பூமியில் ஆட்சி தமிழர் மரபால் 
பூத்துக் குலுங்கள் பார்க்காயோ? 
தமிழன் என்றே சொல்லடாநீ 
       தரணி முழுதும் வெல்லடாநீ 

மேலும்

rajkavi - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2015 1:29 pm

உனது விழிகளின் வீணையில்
இமைகள் இசை மீட்டுகிறது...

உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம்
என்னை விட காகிதமே
அதிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறது...

பூக்களைப் போல நீ இல்லை
எல்லா பூக்களும்
உன்னைப் போலவே இருக்கின்றன...

மௌனம் கூட அழகாகிறது
நீ உறங்கும் பொழுது...

உன் இதழ் தொட்டதும்
வெட்கத்தில் சிவந்து
ஒரு மடங்கு சிவப்பு அதிகமானது
உதட்டுச் சாயத்திற்கு...

இதுவரை இசையென்று இருந்ததெல்லாம்
இல்லாமல் போகிறது
உன் கொலுசு சத்தத்தில்...

நீ
வெளியில் வராதே
வெயில் வேடிக்கைப் பார்க்கிறது...

உன் பாத சுவடுகளை
அழிக்க மனமில்லாமல்
அலைபாய்கிறது அலைகள் கூட...

நீ
கண்காட்சிக்கு செல்லும்ப

மேலும்

தம்பி என்று உரிமையாய் சொல்லுங்கள் 02-Oct-2015 6:39 am
மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழரே.. அகராதி எல்லாம் இல்லை நண்பரே... ஏதோ என்னால் முடிந்ததை எழுதுகிறேன்... ஆனாலும் என்னை விட இங்கு பலர் மிக அருமையாக எழுதி கொண்டிருக்கிறார்கள்... அவர்களையும் படித்து பாருங்கள்... 01-Oct-2015 11:31 pm
ஹா ஹா... அப்படியெல்லாம் இல்லை நண்பரே... என்னை விட மிக அழகாக எழுதும் வல்லமை இந்த எழுத்து தள கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள்... நான் ஏதோ கிறுக்கி கொண்டிருக்கிறேன்... அவ்வளவுதான்... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி... 01-Oct-2015 11:29 pm
காதல் அகராதியோ நீங்கள் 30-Sep-2015 5:16 pm
rajkavi - rajkavi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Apr-2015 8:53 am

ஒருவர்
இவரை ஏன் பேப்பர் மின்ஸ்டர்ன்னு சொல்றீங்க
மற்றவர்

ஊருக்கு கிணறு வேணுமின்னு கோப்பு ஒன்னு அனுப்பினார்

பணமும் வந்தது. அப்புறம் ஆறு மாசம் கழிச்சு அந்த கிணறு

பொது மக்களுக்கு இடைஞ்சலா இருக்கு அதை மூட

வேண்னுன்னு மற்றொரு கோப்பு அனுப்பி வச்சாரு

மூடுரத்தக்கும் பணம் வந்திச்சு .........

ஒருவர்

ஆமாம் அவரு கிணறு தோண்டுனாரா இல்லியா



மற்றவர் !!!!!!!!! ???

ராஜ்கவி. சி. அருள் ஜோசப் ராஜ்

மேலும்

rajkavi - முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
மேலும்...
கருத்துகள்

மேலே