எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஞாயிறு விடிந்தால் இந்தியாவில் ஊரடங்கு... ஒரு நாள் மட்டும்...

ஞாயிறு விடிந்தால்
இந்தியாவில் ஊரடங்கு...

ஒரு நாள் மட்டும் நீ 
வீட்டில் அடங்கு....

எங்கிருந்தோ வருகிறது
கொடிய கிருமி...

பரப்பி விடாதே 
நீ இருமி...

வாழத்தான் 
பிறந்தோம்
மண்ணில்...

அலட்சியம் 
வேண்டாம்
உன்னில்...

உன் உயிர் காக்க
துடிக்கிறது எத்தனையோ துறை...

நீ மட்டும் சொல்லி திரியலாமா ஊரெல்லாம் குறை...

விரலால் கூட
பிறரை தொடாதே...

வீம்பாக இருந்தால் நோய்
உன்னை விடாதே...

கண்.,
காது.,
மூக்கு.,என
ஐம்புலன்...

விரலால்
தொடாமல்
இருப்பதே
பெரும்பலன்...

கிருமிகள்
இருக்கும்
கண்ணுக்கு
தெரியாமல்...

நீ இருக்க
வேண்டாம்
அது மட்டும்
புரியாமல்....

கழுவுவோம்
சோப்பினால்
கையை...

காத்திடுவோம்
நோயின்றி
மெய்யை...

காற்றில்
தண்ணீரில்
பரவாது...

தொட்டால்
விரல்பட்டால்
விடாது...

உலகம் 
முழுவதும்
எத்தனையோ
பலி....

நமக்குள்
இருக்கட்டும்
ஒரு மீட்டர்
இடைவெளி...

தனிமைபடு
மார்ச்
இருபத்து
இரண்டு...

கிருமியை
விரட்டும்
எண்ணம்
மனதில் 
கொண்டு...

அடங்கு
அடங்கு
வீட்டில்...

நன்றாய்
வாழலாம்
நாட்டில்...

இது நம்
உயிர்
காக்கும்
யுத்தம்...

இப்போதைய
தேவை
முழு முதல்
தன்சுத்தம்...

இனிமை
தரட்டும்
தனிமை...

தாய்
நாட்டுக்கு
கிடைக்கும்
பெருமை...

________________________

நன்றி.,
அன்புடன்.,
சிறை கவிஞன்.பசுமைபுறா
( சந்தோஷ் குமார்.மு )

பதிவு : பசுமைபுறா
நாள் : 21-Mar-20, 9:48 pm

மேலே