இந்த " கொரோனா " வைரஸ் வந்ததால் தான்...
இந்த " கொரோனா " வைரஸ் வந்ததால் தான் இரு விஷயங்கள் இன்று நாடு முழுவதும் நடக்கிறது .
ஒன்று ,
அரசாங்கங்கள் மக்களை நினைக்க ஆரம்பித்து,கவலைப்படவும் வைத்துள்ளன .
இரண்டு ,
மக்களும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கி விவாதிக்கவும் ஆரம்பித்து விட்டனர் .
இரண்டுமே நல்லதுதான் . நான் நினைப்பது ,எதிர்பார்ப்பது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நலமுடன் வாழ வேண்டியதும் ,அரசாங்கத்திடும் இருந்து பெற வேண்டிய நலன்கள் , சலுகைகள் ஏதும் தவறாமல் கிடைக்க வேண்டியதும் தான் .
ஆனால் அதற்கு இருபுறமும் இருந்து சமநிலையில் ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்திட வேண்டும் . எந்தவித பாகுபாடும் இல்லமால் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பம் .
இந்த கொடிய உயிர்கொல்லி வைரஸை விரட்டியடிக்க வேண்டும் . அதுவே நமது குறிக்கோளாக இருந்திடல் வேண்டும்.
அரசின் நடவடிக்கைகள் சற்று தாமதமாக இருந்தாலும் தொய்வின்றி தொடர வேண்டும் .அதுவே இன்றைய தேவையும் அவசியமும் கூட .
பழனி குமார்
23.03.2020