எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*"எதிர் நீச்சல்"* பாரினில் பிறந்திடும் யாவரும் - இங்கே...

*"எதிர் நீச்சல்"*

பாரினில் பிறந்திடும் யாவரும் - இங்கே
தேரினில் உலாப் போவதில்லை
தேங்கிடும் ஓடையும் கூட மாசண்டும்
ஓங்கிடும் ஒற்றைக்கல் தெளியவைக்கும். 

சுற்றும் காற்றாடிக்கும் எதிர்விசைக் காற்று
குற்றம் சாட்டப்பட்ட குருடனுக்கு ஏது திசை?
நேரங்கள் சாதிக்கப் பிறந்த சாமணியனுக்காம்
வேதங்கள் குறைசொல்லிக்  கும்மியடிப்பவனுக்கு.

தடைகற்கள் முகத்தில் உமிழ்ந்த அமிலம்
கடைக்கோடி சென்றாலும் பிளிரி எழவே
கூட்டுபுளுவும் கூட்டில் அடைபட்டே சாகும்
ஓட்டைப்பிழந்து வண்ணம் பூசும் வரை.

சமுத்திரம் மூழ்கி  முத்தெடுக்க திரானியின்றி
தமுத்திரம் சாடிப் பலனில்லை
ஆத்திரம்கொண்டு வெகுந்தெளும் முன் - சூரிய
ரெளத்திரம் பழகு.

மூலையில் மண்டிக் கிடந்தால் - உன்
சோலையில் என்றும் இலையுதிர் காலமே
விழித்தெழும் பொழுதினில் எல்லாம் போராடு
மழைத்துளி மண்ணில் விழும் வசந்தகாலமே...

ஆற்று ஓடையில் நடை பயிலாதே
காட்டாற்று வெள்ளத்தில் கரம் தேடாதே
எதிர் நீச்சல் போடு- வெற்றி உனதே!!!

இவன்,
இரா.அன்பரசு,
கோவை..

பதிவு : ANBARASU
நாள் : 8-Apr-20, 12:23 am

மேலே