எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எடுத்துக்கொள் மீண்டும் உன்னிதயத்தை....! கனக்கின்றன என்னிதயவறைகள்... இரு இதயத்தைச்...

எடுத்துக்கொள் மீண்டும் உன்னிதயத்தை....!


கனக்கின்றன என்னிதயவறைகள்...
இரு இதயத்தைச் சுமந்திட முடியாது...
நித்தமும் யுத்தமும்
நிம்மதி இன்றியும்
நகர்ந்திடும் பொழுதுகளின்
நகர்வுக்கு...

நடுநடுங்கி
நசுக்கப்பட்டதால்
நிலைகுலைந்து....

வார்த்தை ஜாலங்களின் வெளிக்குட்
சிக்கித் தவித்துச்.
சிதைந்த
சிந்தனை தொலைத்த
சிறுபேதை....

கனமான உன் மனதின்
கருணையற்ற வார்த்தையால்
கலங்கடிக்கப்பட்ட
கலங்கமில்லா இதயக்கூட்டுள்...

கறையோடு
கருணையின்றி
கத்தியெனப் பாய்ந்து
காயந்தரும்
கனத்த இதயத்தைப்
பொருத்த முடியவில்லை....

மீண்டும் பெற்றுக்கொள்
மீளாத காதலின்
சுவடுகளை
அப்போதேனும்
நான் மீண்டிடட்டும்
மீளொணாத் துயர்நின்று....!




நாள் : 24-Aug-20, 10:48 pm

மேலே