செட்டிநாட்டில் பிறந்த குட்டி ராணியே.. பிரம்மன் அவன் படைத்த...
செட்டிநாட்டில் பிறந்த குட்டி ராணியே..
பிரம்மன் அவன் படைத்த அழகுமேனியே..
உன்னிடம் தான் இருக்கு பல ரகசியம்..
பார்ப்போர்தனை சொக்கவைக்கும் நீ ஒரு பருவபெண்ணினம்..
நெற்றிதனில் தவழும் உன் அழகு கூந்தலும்..
அந்த கூந்தல்தனில் சூடும் பூவுக்கு மணமும் கூடிடும்..
நெற்றினிலே வைத்திருக்கும் திருநீறு குங்குமம்..
நீ மங்கையல்ல தேவதையென மனதும் உணர்த்திடும்..
காது மடலில் தொங்கும் ஜிமிக்கி கம்மலும்.
நீ மேல் காது குத்தி கொண்டால் வசிகரம் கூடிடும்..
இமைகள் ரெண்டும் இரு துருவ வானவில்லடி..
கருவண்ண மை இடுகையிலே கார்மேகம் திரண்டிடும்..
கெண்டை மீன்கள் துள்ளி ஓடும்
உந்தன் கண்களும்..
கண்கள் ரெண்டால் பார்க்கையிலே
பாயும் மின்சாரம்..
முக்கோண மூக்கழகி பெண் நீயடி..
மூக்கினிலே அணிந்திருக்கும் மூக்குத்தியும் நட்சத்திரமாய் ஜொலித்திடும்..
உதட்டில் சாயம் பூசி செய்வாய் மூடு மந்திரம்..
செவ்விதழ்கள் திறந்து பேசுகையில் தேனும் வழிந்திடும்..
உன் புன்சிரிப்பும் வெளிப்படுத்தும் புரிதல் ஆயிரம்..
அந்த சிரிப்பினிலே தடுமாறியவன் நானும் ஒருவனும்..
நீ பேசும் போது கீச்சு குரல் வார்த்தை வெளிப்படும்..
அந்த வார்த்தைதனில் கவிக்குயில்கள் கற்கும் சங்கீதம்..
உந்தன் சங்கு கழுத்து செந்நிறத்தில் சிவந்து ஜொலிக்கையில்..
எந்த தங்க நகையும் உன் நிறத்தின்முன் மங்கி போகுமே..
உன் முன்னழகில் புதைந்திருக்கு மர்மம் ஆயிரம்..
அங்க அசைவு, வளைவுகள் கண்டு மயங்கி விழுகணும்..
உன் கைகளிலே இருப்பது காந்த விசையடி..
கை உரசும் உன் வளையல்கள் வெளிப்படுத்தும் பல சங்கீதம்.
உன் இடுப்பழகில் தினம் தினம் சொக்கி போகனும்..
சேலை கட்டி இடையை ஆட்டி நடக்கும் போது போதை ஆகிடும்..
உன் பின்னழகு தானே இங்கு பெரிய பொக்கிஷம்..
பலர் பார்வையிலே அது உனக்கு கவர்ச்சி கூட்டிடும்..
உன் பளிங்கு தொடை கால்களுமே பர்மா தேக்கு தான்..
உன் ஒய்யார நடையினிலே பூகம்பம் வந்திடும்..
நீ கால்களிலே அணிந்திருக்கும் முத்தில்லா கொலுசும் அழகுதான்..
உன் பாதம்தனை தொட்டதினால் விமோட்சம் அடைந்திடும்..
உன் பாதவிரல் பத்தும் பல வகையடி..
அது பூமிதனில் படும்போது இந்த மண்ணும் குளிர்ந்திடும்..