எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இடையில் ஒரு இடைவேளை ------------------------------------------------ இடையில் ஒரு இடைவேளை...

  இடையில் ஒரு இடைவேளை
------------------------------------------------

இடையில் ஒரு இடைவேளை , இயற்கை எனக்களித்த இடைக்காலத் தடை .
இருவாரங்கள் கரைந்து சென்றது. கட்டாய ஓய்வில் இருக்க வேண்டிய சூழ்நிலை. இடறி விழுவதும் எழுவதும் இயற்கை . என்னை நாடி வந்த
இடையூறு திரும்பிச் செல்ல வந்த வழியை தேடுகின்றது .உடல் நலிவுற்று படுக்கையில் இருந்தாலும் , உள்ளம் உலகை சுற்றியது . சிந்தனை சிறிதும் சோர்வின்றி நாளும் நகர்வலம் சென்றது . கற்பனைகள் சிறகு முளைத்தப் பறவைப் போல பறந்துத் திரிந்தது . அவ்வப்போது எண்ணத் திரையில் நடந்ததும், நடக்கவுள்ளதும் பற்றி மாறிமாறி காட்சிகளாக
ஓடியது ."நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " எனும் பொன்மொழியின் பொருளை அடிக்கடி நடைமுறையில் உணரும் வாய்ப்பைப் பெற்றவன்
அடியேன் . எனக்கும் அது பழகிவிட்டது.

இதுவும் கடந்து போகும் என்ற தீர்க்கமான முடிவும் எனது நெஞ்சில் உண்டு . நான் விரைவில் குணம் அடைய பலரும் அன்புடன் அக்கறைக் கலந்த விருப்பத்தையும், நிறைந்த மனதுடன் கூறிய வாழ்த்துகளும் எனக்கு
மனதளவில் ஊக்கம் அளித்தது .

அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி.


பழனி குமார்
15.09.2020  

நாள் : 15-Sep-20, 4:31 pm

மேலே