ஊடல் + கூடல் = தேடல் காதலன் :...
ஊடல் + கூடல் = தேடல்
காதலன் :
உன் மீது கொண்ட அன்பில்
சிறிதும் கலங்கமில்லை...
உன் உடல் மேல் ஆசை கொண்டு
மோகத் தீயில் நான் எரியவில்லை...
ஆனால் என்னையும்
தாண்டியும் உன்னை
உயரம் கொண்டு செல்ல நினைக்கிறேன்...
உன் கன்னத்தில் முத்தமிட்டு
கலவி வெறி கொண்டு நான் திரியவில்லை...
ஆனால் நீ கால் கொண்டு
நடந்த வலியை நான் உணர்கிறேன்...
உன் பாதச் சுவட்டைத் தாங்க நினைக்கிறேன்
உன் உதட்டைக் கடித்து
கழுத்தில் புதைந்து
மார்பின் மத்தியில்
மதி மயங்கி கிடக்கவில்லை...
உன் பலத்தை உனக்கு
உணர்த்த விரும்புகிறேன் ...
உன் கனவுகளுக்கு
உயிர் கொடுக்க ஆசைப்படுகிறேன் ...
உன் நிறத்தை பார்த்து
நான் நெருங்கி வரவில்லை...
உன் குணத்தையும் அன்பையும்
உணர்ந்தே நெருங்கினேன்...
ஆனால் உன் சுயத்தையும் சுதந்திரத்தையும்
நீ இழக்க நான்
அனுமதிக்க மாட்டேன்...
காதல் என்பது காமம் இல்லை அனுபவமும் இல்லை
பொழுதுபோக்கு இல்லை...
மிகச் சிலருக்கு தான்
காதல் வாழ்க்கை...
காதல் மிருகத்தை மனிதனாக்கும்...
மனிதனை புனிதமாக்கும்...
சில வருடங்களுக்கு பிறகு நீ உணர்வாய்...
காமத்தை விட காதல் மேல்...
உண்மையான அன்பு
அதற்கும் மேல் என்று
உன்னை மிக உயரத்திலும் வைத்திருப்பேன்...
உண்மையான அன்பு என்பது இரு மனதோடு சரி...
அது ரகசியம்...
தனிமை மட்டும் தான் தேடும்..
புரிந்துகொள்ளும் வரை காத்திருக்கும்...
எதையும் மறைக்காது... மறக்காது...
நமது ரகசியங்களை பிறருக்குத்
தெரிவிக்க வேண்டியதில்லையே...
அன்பில் இரு வகை...
நீ வார்த்தையா ? வாழ்க்கையா ?
வாழ்வில் ஏதோ ஒரு உறவுக்காவது உண்மையாய் இருப்பேன்...
குறைந்த பட்சம் உனக்காவது உண்மையாய் இருப்பேன்...
என்றாவது ஒரு நாள் உன் உண்மை எனக்கு வலிக்கட்டும்...
துரோகத்தின் வலியைவிடவும் அது அதிகமாய் இருக்கும்...
அன்று என் ஈகோ உடைந்து உண்மைக்காக ஏங்குவேன்..
அன்றைக்கும் எனக்கு நீ தாயுமானவளாக இருப்பாய்...
வாழ்க்கையில் உண்மையான
அன்பு ஒரு முறைதான் கிடைக்கும்...
அதை உன்னிடம் மட்டுமே உணர்கிறேன்..
இழந்தபின்தான் அதன் அருமை புரியும்..
இவ்வுலகில் நான் இழக்கக் கூடாத
ஓர் உறவு நீயடி...
இருவரும் இறக்கும்வரை அது சாகாமல் வாழும்...
காதலி :
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ?
மூன்று வயதில் வண்ணத்துப்பூச்சிக்கே பயப்படுவேனாம்...
அம்மா சொன்னாங்க...
ஐந்து வயதில் பக்கத்து வீட்டு கிளிக்கும் பயந்தது நினைவிருக்கின்றது....
கரப்பான் பூச்சிக்கு பயந்து ஊரையே கூட்டினேன் எட்டு வயதில்....
பன்னிரண்டாம் வயதில் பேய்ப்படம் பார்த்து இரண்டு நாட்கள் காய்ச்சல்....
பதினைந்தாம் வயதில் ஒருமுறை,
நாய்க்கு பயந்து இரண்டு தெரு சுற்றிச் சென்றிருக்கின்றேன்....
இன்று....
இந்த வயதினிலே,
உன் இதயச்சிறைக் கைதியாகி விடுவேனோ - என பயந்து
தினம் தினம் கனவினில் மூழ்குகின்றேன்....
உன்னை கருவில் சுமந்த தாய் கூட எனைப் பார்த்து பொறாமைப் படுகிறாள்
இத்தனை பயமிருந்தும்
நான் உன்னை தினம் தினம் இதயத்தில் சுமக்கின்றேன் என்று...
காதலன் :
இப்போதெல்லாம் எத்திசை நோக்கினாலும் தெரிவது உன்
முகம் தான்..
கண்களை மூடினாலும் நீ தான்..
எக்குரல் கேட்டாலும் உன் குரல் போலவே ஒலிக்கின்றது..
மௌனங்களிலும் நீ தான்..
புத்தகங்களின் பக்கங்கள் எல்லாவற்றிலும் உன் பெயர் தான் அச்சடித்தாட் போல் தெரிகிறது..
கண்ணாடியில் தெரிவது நீ..
கடிகாரத்தில் தெரியும் முட்களும் நீ..
சூரியனிலும் உன் சிரித்த முகம்..
பூக்களிலும் உன் வாடா முகம்...
நான் உண்ணும் உணவில் நீ..
அருந்தும் நீரில் நீ..
படுக்கும் மெத்தையில் நீ..
அசையும் அசைவுகளில் நீ..
கேட்கும் பாடல்களில் நீ..
பார்க்கும் பார்வைகளில் நீ..
சிரிக்கையில் என் சந்தமாய் நீ..
நடக்கையில் என் நிழலாய் நீ..
எழுதுகையில் என் எழுத்தாய் நீ..
பேசும் போது என் தமிழாய் நீ..
காற்றில் வருவதும் உன் மூச்சு சுவாசம் தான்..
காதலி :
என் முதல் - முடிவு
இன்பம் - துன்பம்
சிரிப்பு - அழுகை
உள் - புறம்
இரகசியம் - பரகசியம்
கனவு - நினைவு.... எல்லாமே நீ....
என் தலையணையும் நீ...
தலைவனும் நீ தானடா..
அன்பானவனே.. இனிமையானவனே..
அழகா.. கள்வனே.. மடையா..
கருவண்டே..
தத்தி...
என் உயிரே..
என் சுவாசமே..
நண்பா.. பகைவா..
ஆருயிரே.. கண்ணாளனே.. தங்கமே..
செல்லமே.. காதலே...
என் இதயத் துடிப்பே..
மணவாளனே.. மன்மதனே..
என் கவிதையின் பொருளே..
எனக்குள் ஐக்கியம் ஆனவனே..
என்னவனே.. உன்னை நினைக்கையில் என் மனமும் மெய்யும் உணரும் இன்பங்கள் கோடி...
உன்னை தினமும்
என் கண்களால் தரிசிக்க..
என் விரல்களால் வருட..
என் கைகளால் தழுவ..
என் இதழ்களால்
உன் இமை மூட..
செல்லமாக கொஞ்ச...
திட்ட... கஷ்டப்படுத்த..
உன் மார்பில் என் முகம் புதைக்க..
உன் முத்தங்களால் என் உடல் தீண்ட..
ஓர் உயிர் ஓர் உடல் ஆக நாம் சேர
எப்போது என் கரம் பிடிப்பாயடா ???
நீ என்னுடன் இல்லாத ஒவ்வாரு நொடியும் - காத்து நிற்கின்றேன்
கவிதைக்கு காத்து நிற்கும் வெள்ளைத் தாள்களாய்....
உன் கண்களை சந்தித்த வேளை புரிந்ததடா
நான் பெண்ணாகப் பிறந்ததன் அர்த்தம்....!!!